மதுரை காமராஜர் பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் தடை
மதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமனம் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு மே 26 ஆம் தேதி செல்லதுரை என்பவர் ஆளுநரால் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். துணை வேந்தர் பதவிக்கான பணி மூப்பு தகுதி செல்லதுரைக்கு இல்லை என்று கூறி செல்லதுரை துணை வேந்தராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, அந்தோனி ராஜ் ஆகிய 2 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லத்துறை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்ததை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, செல்லதுரை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
செல்லதுரையின் மனு இன்று திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏ.கே.சித்தரி, அசோக் பூஷன் அமர்வு விசாரித்தது. அப்போது செல்லத்துரையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், தமிழக ஆளுநர் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி செல்லத்துரையை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்தார். அவர் மிகவும் தகுதியான நபர் என்று கூறினார். அதோடு, சென்னை உயர்நீதிமன்றம் துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்ததற்கு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு தற்போது புதிய துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் மற்றும் கே.கே.வேணுகோபால் ஆகியோர் வாதிடுகையில், செல்லத்துரை பி.ஏ., எல்.எல்.பி., படிக்காதவர் என்றும், அவர் மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட போது, அவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்ததாகவும், எனவே அவரது நியமனம் செல்லாது என்றும் அதனால் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது சரி தான் என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், ஆகஸ்ட் 6ம் தேதி வரை புதிய துணைவேந்தரை நியமனம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications