பன்றிக்காய்ச்சல் இருந்தால் திருப்பதி வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்தவர்களும், நோய் அறிகுறி இருப்பவர்களும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனவரி 26ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அன்றைய தினம் மலையப்ப சுவாமி வாகனங்களில் திருவீதி உலா வருவார். மினி பிரம்மோற்சவம் போல நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் திருப்பதியில் கூடுவார்கள்.
இதனிடையே தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 21 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் நூற்றுக் கணக்கானோர் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே திருமலை திருப்பதியில் கடும் குளிர் நிலவுவதால், பன்றிக் காய்ச்சல் கிருமிகள் வேகமாகப் பரவும் ஆபத்து இருக்கிறது. இதனால், பன்றிக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவர்களும், நோய் அறிகுறி உள்ளவர்களும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவஸ்தான சுகாதாரத் துறையினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் பாதிப்பு
தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். நேற்று மேலும் 3 பேர் உயிர் இழந்தனர். இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சலை தடுக்க தெலுங்கானா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருவதுடன், ஆங்காங்கே பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. குளிர்காலத்தில்தான் இந்த காய்ச்சல் வேகமாக பரவும். இதைத் தடுக்க முறையான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். திரவ உணவுகள், காய்கறி மற்றும் பழங்கங்களை சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சந்திரசேகரராவ் வேண்டுகோளின்படி 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவை மத்திய அரசு ஹைதராபாத் அனுப்பி வைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications