பயணிகளிடம் வரவேற்பில்லை... மும்பை விமான நிலைய ‘பெஸ்ட்’ ஏ.சி. பேருந்துகள் தற்காலிக ரத்து
மும்பை: பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மும்பை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஏ.சி. பஸ்கள் தற்காலிகமாக 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் மும்பை பன்னாட்டு விமானநிலையம் 2-வது முனையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பெஸ்ட் குழுமம் சார்பில் ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்பேருந்துகளுக்கான கட்டணமாக தானே, போரிவிலி பகுதிகளுக்கு ரூ.120-ம் சி.பி.டி. பேலாப்பூருக்கு ரூ.180-ம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த ஏ.சி. பஸ்களுக்கு விமான நிலைய பயணிகளிடம் போதிய வரவேற்பில்லை.இதனால் பெரும்பாலான பஸ்களில் டிரைவரும், கண்டக்டரும் மட்டுமே பயணம் செய்தனர். இது நிறுவனத்திற்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்பதால், இப்பஸ்களை தற்காலிகமாக ரத்து செய்ய பெஸ்ட் குழுமம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பெஸ்ட் குழும பொது மேலாளர் ஓம் பிரகாஷ் குப்தா கூறியதாவது:-

போதிய வரவேற்பில்லை...
பயணிகளின் வசதிக்காக விமான நிலையத்தில் இருந்து மேற்கு புறநகர், கிழக்கு புறநகர் பகுதிகள் மற்றும் நவிமும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த பஸ் சேவைகளுக்கு விமான பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

விளம்பரம்...
எனவே முதலில் இந்த பஸ் சேவை குறித்து விமான பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விளம்பரம் செய்து அதை பிரபலப்படுத்த உள்ளோம். மேலும் விமான நிலையங்களிலும் டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் விமானங்களிலும் ஏ.சி. பஸ் சேவைகள் குறித்து அறிவிப்பு வழங்க விமானநிலைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளோம்.

இரவு நேர பயணிகள்...
மேலும் தற்போது மழைக்காலமாக இருப்பதால் விமானங்கள் நள்ளிரவு நேரத்திலேயே விமான நிலையத்தில் தரையிறங்குகின்றன. இதனால் பயணிகள் பஸ்களில் செல்ல விரும்புவது இல்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

தற்காலிக நிறுத்தம்...
ஆகவே 2 மாதங்களுக்கு போரிவிலி, தானே மற்றும் நவிமும்பைக்கு பன்னாட்டு விமானநிலையம் 2-வது முனையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஏ.சி. பஸ் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளன. அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த ஏ.சி. பஸ்கள் மீண்டும் இயக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications