சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: உபி முதல்வர் கடும் எச்சரிக்கை
சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கோரக்பூர்: சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையிலெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கோரக்பூர சென்றார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை கையிலெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சியில் சிறந்த மாநிலமாக்க வேண்டும் என்ற மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில் நான் இறங்கி உள்ளேன் என்றார். மேலும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் என்பதே கிடையாது என்றும் அவர் கூறினார்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். 24 மணி நேரம் மின்சாரம் கொடுப்போம், விரைவில் தரமான சாலைகளை கொடுப்போம் என்றும் யோகி ஆதித்யநாத் தெவித்தார்.
மேலும் தன்னுடைய அரசு எந்த ஒரு விவசாயியையும் தற்கொலைக்கு தள்ளாது என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications