சட்டசபையை முடக்கியதாக சொல்வதா? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே.வங்க ஆளுநர் பதில்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையை ஆளுநர் ஜெகதீப் தன்கர் முடக்கியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் மேற்கு வங்க மாநில முதல்வர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாலேயே சட்டசபை கூட்டத் தொடரை முன்னதாகவே முடித்து வைத்ததாக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர், முதல்வர் மமதா பானர்ஜி இடையேயான மோதல் உக்கிரமாக உள்ளது. மேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டசபை கூட்டம் முன் கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. ஆனால் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர்தான், சட்டசபையை தன்னிச்சையாக முன்கூட்டியே முடக்கி வைத்தார் என விமர்சனம் எழுந்தது. இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானாது.
மேற்கு வங்கத்தைப் போல தமிழக சட்டசபையையும் முடக்க வாய்ப்புள்ளது என அதிமுக தரப்பும் பேசியது. இதனால் ஆளுநர்களை எதிர்க்கும் மாநிலங்களில் அடுத்தடுத்து பரபரப்பு நிலவியது. இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீபன் தன்காரின் நடவடிக்கைக்கு ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில், மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநில தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என விமர்சித்திருந்தார்.

இதற்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் பதிலளித்துள்ளார். அதில், மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, சட்டசபையின் நடப்புக் கூட்டத் தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகிறேன். கடந்த நவம்பர் 17-ந் தேதி நிறைவடைந்த பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைக்க இம்மாதம் 11-ந் தேதி மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி 12-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications