பாஜக காணாமல் போக போகிறது.. பாருங்கள்! ஆருடம் சொல்லும் லாலு பிரசாத் யாதவ்.. பரபரக்கும் உபி களம்!
பீகார்: உத்தரப்பிரதேச தேர்தலுக்குபிறகு பாஜக காணாமல் போகும் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறது. கோயில் குறித்துப் பேசிக்கொண்டும், கலவரத்தைத் தூண்டிக்கொண்டும் இருப்பது தான் பாஜகவின் நோக்கம் என்று லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நாளை தொடங்குகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது.

லாலு பிரசாத் யாதவ்
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''பாஜக மதத்தை வைத்து கட்சி நடத்துகிறது. மதம் குறித்துப் பேசியே மக்களை சோர்வடையச் செய்கிறது. உத்தரப்பிரதேசத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாஜக செய்து வரும் பரப்புரையைப் பார்த்தால், நிச்சயம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தோற்கும்.

காணாமல் போகும்
பாஜக செய்த கலவரங்கள், அவர்கள் பிரசாரங்ளைப் பார்க்கும் போது இந்தத் தேர்தலுக்குப் பிறகு பாஜக எனும் கட்சியே காணாமல் போகும்'' என்று தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலிலும் மத்திய தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது லாலு கட்சி. இந்த உத்தரப்பிரதேச தேர்தலில் லாலு, சமாஜ்வாதிக் கட்சியையே ஆதரிப்பதாகத் தெரிகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நாளை தொடங்கி நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் நாளை காலை தொடங்குகிறது. 11 மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என்று நான்கு முனைப் போட்டி உத்தரப்பிரதேசத்தில் நிலவுகிறது.

பாஜக VS சமாஜ்வாதி
இந்தத்தேர்தலில் உத்தரப்பிரதேசம் பெரிய கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கும் அதற்கு முந்தைய தேர்தலில் ஆட்சியைப் பிடித்த சமாஜ்வாதிக்கும் தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மீண்டும் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை தெரிந்துகொள்ள மொத்த நாடும் ஆவலாக உள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications