யூரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து ஆதாரங்களை அளித்தது இந்தியா
டெல்லி: யூரி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர், பாகிஸ்தான் தூதரிடம் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் அந்த 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்தது. யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா.,விலும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேசினார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று நேரில் அழைத்தார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 2 பேர், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ உதவியது குறித்த ஆதாரங்களை வழங்கினார்.
அந்த இரண்டு நபர்களை யூரி பகுதியில் உள்ள மக்கள் பிடித்து, அவர்களை இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் தற்போது தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் கட்டுப்பட்டில் உள்ளதாகவும் அப்துல் பாசித்திடம் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெய்ஷங்கர், அப்துல் பாசித்திடம் வலியுறுத்தியுள்ளார்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications