யூரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து ஆதாரங்களை அளித்தது இந்தியா
டெல்லி: யூரி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர், பாகிஸ்தான் தூதரிடம் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் அந்த 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்தது. யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா.,விலும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேசினார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று நேரில் அழைத்தார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 2 பேர், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ உதவியது குறித்த ஆதாரங்களை வழங்கினார்.
அந்த இரண்டு நபர்களை யூரி பகுதியில் உள்ள மக்கள் பிடித்து, அவர்களை இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் தற்போது தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் கட்டுப்பட்டில் உள்ளதாகவும் அப்துல் பாசித்திடம் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெய்ஷங்கர், அப்துல் பாசித்திடம் வலியுறுத்தியுள்ளார்.
-
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம்.. காபூல் மருத்துவமனையில் 400 பேர் பலி..தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications