மோடி விவகாரத்தில் இறங்கி வரவில்லை: அமெரிக்கா
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக பிரமதர் வேட்பாளர் மோடி விவகாரத்தில் இறங்கி வரவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள 2013ம் ஆண்டுக்கான மனித உரிமை நடைமுறைகள் அறிக்கையில் குஜராத் முதல்வர் மோடியின் பெயர் இல்லை.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாகி கூறுகையில்,

மோடி விவகாரத்தில் அமெரிக்கா இறங்கி வரவில்லை. இந்தியாவில் நடக்கும் சமூக வன்முறை சம்பவங்கள் குறித்த எங்களின் நிலை தெளிவாக உள்ளது. எங்களிடம் புதிய கொள்கையோ அல்லது கொள்கை திருத்தமோ இல்லை. மோடியின் விசா விவகாரம் குறித்து உங்களுக்கு தெரிவிக்க ஒன்றும் இப்போதைக்கு இல்லை.
மோடியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் சந்தித்து பேசியதை வேறு எதனுடம் தொடர்புபடுத்த வேண்டாம். வரும் மே மாதம் இந்தியாவில் தேர்தல் நடக்கவிருப்பதால் பல்வேறு அதிகாரிகளை நாங்கள் சந்தித்து வருகிறோம் என்றார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அமெரிக்கா மோடிக்கு கடந்த 2005ம் ஆண்டு முதல் விசா கொடுக்க மறுத்து வருகிறது. அதில் இருந்து மோடியும் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்க செயலாளர் ஜான் கெர்ரி வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் மனித உரிமைகள் பிரச்சனை என்றால் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்கள், அதில் கொலை, சித்ரவதை, பாலியல் பலாத்காரமும் அடங்கும், அரசின் அனைத்து தரப்பிலும் பரவியுள்ள ஊழல், இதனால் நீதி மறுக்கப்படுகிறது. திடீர் என்று மாயமாவது, சிறையில் போதிய வசதி இல்லாதது உள்ளிட்டவை பிற மனித உரிமை பிரச்சனைகள் ஆகும்.
சில மாநிலங்களில் மதமாறுதலை சட்டம் அனுமதிப்பதில்லை. இது தொடர்பாக கைது நடவடிக்கைகள் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஊழல் எங்கும் உள்ளது. பலாத்காரம், கொடுமை, வரதட்சணை கொலைகள், கௌரவ கொலைகள், பாலியல் அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
2002ம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது குற்றங்கள் செய்த போலீசார் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறித்த வழக்கில் அரசு சில முன்னேற்றத்தை கண்டுள்ளது. இருப்பினும் கலவரத்தின்போது மக்களை குஜராத் மாநில அரசு காக்க தவறியது சமூக ஆர்வலர்களின் தொடர் அக்கறையாக உள்ளது. அரசு மக்களை பாதுகாக்க தவறியதால் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications