வெஜ்டேரியன்ஸ் & டீடோட்டலர்ஸ்க்கு மட்டும்தான் கோல்டு மெடல்.. புனே பல்கலைக்கழகம் அதிரடி!
அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே ‘கோல்டு மெடல்’ வழங்கப்படும் என புனே பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
புனே: அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே 'கோல்டு மெடல்' வழங்கப்படும் என புனே பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற புனே பல்கலைக்கழகம் 1949 ஆம் தொடங்கப்பட்டது. 411 ஏக்கர் பரப்பளவில் இந்த பல்கலைக்கழகம் பரந்து விரிந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோல்ட் மெடல்களை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அசைவம் சாப்பிடக்கூடாது
அதன்படி கோல்டு மெடல் பெற விரும்பும் மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

டீடோட்டலர்களாக இருக்கனும்
மேலும் மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் கோல்டு மெடல் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே கோல்டு மெடல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெலர் மாமா
அசைவம் சாப்பிடாமல், மது அருந்தாமல் இருக்கும் மாணவர்களுக்கு ஷெலர் மாமா என்ற பெயருடன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மார்க் எதற்கு?
பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் படித்து பெறும் மதிப்பெண்கள் எதற்கு என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எம்பி சுப்பிரியா எதிர்ப்பு
மாணவர்களிடம் சமூக ரீதியில் பிளவை ஏற்படுத்தும் செயல் என்றும் புகார் எழுந்துள்ளது. பல்கலைக் கழகத்தின் இந்த விதிமுறை தனக்கு அதிர்ச்சியளிப்பதாக எம்பியும் சரத்பவாரின் மகளுமான சுப்பிரியா சுளே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
|
எம்பி சுப்பிரியா சுளே டிவிட்
நமது பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது என்றும் அவர் தனது டிவிட்டில் கேட்டுள்ளார். மெரிட்டில் வந்த மாணவர்கள் கதி என்ன என்றும், அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க பல்கலைக்கழகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களை ஏன் பிளவுபடுத்துகிறீர்கள் என்றும் எம்பி சுப்பிரியா சுளே கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications