‘யாஷ் புயலே அடிச்சாலும்...’ நிருபரையே திக்குமுக்காட வைத்த நபர்.. வேற லெவல் பேட்டிங்க!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் யாஸ் புயல் கரையை கடந்த சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் புதன்கிழமை காலை 9 மணியளவில் ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடந்தது. ஆரம்பத்தில் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த யாஸ் புயலின் வேகம் நேரம் ஆக ஆக அதிகரித்தது. பிற்பகல் 12.30 மணியளவில் புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
புயலின் காரணமாக ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தின் திகா, கிழக்கு மெதினிபூர், நந்திகிராம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றின் வேகம் மற்றும் கனமழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

புயல் நேரலை
இந்நிலையில் ஒடிசாவில் இயங்கி வரும் தொலைக்காட்சி ஒன்றில் புயல் கரையை கடக்கும் காட்சிகள் நேரலை செய்யப்பட்டன. அந்த தொலைகாட்சியின் நிருபர் ஒருவர் கையில் மைக் பிடித்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

பதில் கேள்வி
அப்போது அந்த வழியாக சென்ற ஒருவரிடம் பேட்டிகண்ட நிருபர், "கனமழை பெய்து கொண்டிருக்கிறது.. காற்றும் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.. நீங்கள் ஏன் வெளியே வந்தீர்கள்" என கேட்டார். அதற்கு அந்த நபர், "அதே தான் நானும் கேட்கிறேன்.. இந்த சூழலில் நீங்கள் ஏன் வெளியே வந்தீர்கள்?", என எதிர் கேள்வி கேட்டு நிருபரை மடக்கினார்.

திக்குமுக்காடிய நிருபர்
அதற்கு அந்த நிருபர், "புயல் கரையை கடப்பதை செய்தி சேகரிப்பதற்காக நான் வந்தேன்", என பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு சற்றும் சளைக்காமல், "நீங்கள் செய்தி சேகரிக்கும் போது பேட்டி கொடுக்க ஆள் வேண்டாமா? அதற்காக தான் நான் வெளியே வந்தேன்", எனக் கூறி நிருபரை திக்குமுக்காட செய்துள்ளார் அந்த மனிதர்.

வைரல் பேட்டி
இந்த புயல் பேட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைபார்த்த நெட்டிசன்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வருகின்றனர். 'ஆனாலும் அவர் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அவர் வெளியில் வராமல் இருந்தால், பாவம் அந்த நிருபருக்கு இப்படி ஒரு வைரல் கண்டெண்ட் கிடைத்திருக்குமா?' என ஒருசாரார் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

பைத்தியக்காரத்தனம்
மற்றொரு தரப்போ, 'புயல், வெள்ளம், மழை, இப்போது கொரோனா என முன்களப் பணியாளர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு நம்மால் செய்ய முடிந்த பெரிய உதவி, வீட்டில் பத்திரமாக இருப்பதுதான். இதுபோல் அதிமேதாவித்தனமாகப் பேசிக் கொண்டு வெளியில் சுற்றுவது பைத்தியக்காரத்தனம்' என அந்நபரைத் திட்டி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications