ஜெயலலிதாவுடைய 750 ஜோடி கலர் கலர் செருப்புகள், தங்க நகைகள் என்னாகும்?
மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்பு மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதத் தொகையாக பெறப்பட உள்ளது.
டெல்லி: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவரை விடுத்து மற்ற 3 பேரும் தண்டனை சிறை செல்ல உள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்புகள் மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மொத்தம் ரூ. 140 கோடி அபராதத் தொகையை கோர்ட் வசூலிக்கவுள்ளது.

ரூ.100 கோடி அபராதம்
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். எனவே, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள் ஏலம் விடப்பட்டு செலுத்தப்பட உள்ளது.

750 ஜோடி செருப்பு
ஜெயலலிதா வீட்டை ரெய்ட் செய்த போது, 750 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. மேலும், 10,500 புடவைகள்,750 பட்டுப் புடவைகள் மற்றும் 3.5 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்து கர்நாடக மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் எங்கே?
இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் கட்ட வேண்டிய அபராதத் தொகை கட்டப்பட வேண்டும். அதற்காக கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் செருப்புகள், புடவைகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு வர உள்ளது.

அபராதம்
பின்னர், அவை அனைத்தும் ஏலம் விடப்படும். இதன் மூலம் கிடைக்கப் பெறும் பணம் அனைத்தையும் ஜெயலலிதாவின் கட்டப்பட வேண்டிய அபராதத் தொகையாக நீதிமன்றத்திற்கு கட்டப்படும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications