மறுகூட்டல் குளறுபடிகள் ஏன்? சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்
சி.பி.எஸ்.இ. மறுகூட்டல் மதிப்பெண் குளறுபடிகள் மீண்டும் தொடராது என்றும் அதற்கான நடைமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதன் தலைவர் அசோக் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. மறுகூட்டல் குளறுபடிகள் ஏன் என்று அதன் தலைவர் அசோக் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அதில் மீண்டும் பழைய நடைமுறைகளையே தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 10 லட்சத்து, 98 ஆயிரத்து 420 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவுகளை தொடர்ந்து, பலரும் மறுகூட்டல் கோரி, விண்ணப்பம் செய்தனர். இதில், பல மாணவ, மாணவியருக்கு, அசல் தேர்வு முடிவுகளில் கிடைத்த மதிப்பெண்ணை விடவும், இருமடங்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உதாரணமாக, ஒரு மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, 68 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், மறுகூட்டலின் முடிவாக, 95 மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வாறு இருமடங்கு மதிப்பெண் வழங்கப்படுவது, அசல் விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி நடந்துள்ளதா அல்லது மறுகூட்டலின்போது குளறுபடி நடந்துள்ளதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி கூறுகையில், "இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழைய விடைத்தாள் திருத்தும் முறையை நாங்கள் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
ஆனால், சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தும் முறையில் இவ்வளவு நாட்களாக முறைகேடு நடந்துள்ளதாகவே, மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications