மறுகூட்டல் குளறுபடிகள் ஏன்? சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்
சி.பி.எஸ்.இ. மறுகூட்டல் மதிப்பெண் குளறுபடிகள் மீண்டும் தொடராது என்றும் அதற்கான நடைமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதன் தலைவர் அசோக் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. மறுகூட்டல் குளறுபடிகள் ஏன் என்று அதன் தலைவர் அசோக் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அதில் மீண்டும் பழைய நடைமுறைகளையே தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 10 லட்சத்து, 98 ஆயிரத்து 420 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவுகளை தொடர்ந்து, பலரும் மறுகூட்டல் கோரி, விண்ணப்பம் செய்தனர். இதில், பல மாணவ, மாணவியருக்கு, அசல் தேர்வு முடிவுகளில் கிடைத்த மதிப்பெண்ணை விடவும், இருமடங்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உதாரணமாக, ஒரு மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, 68 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், மறுகூட்டலின் முடிவாக, 95 மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வாறு இருமடங்கு மதிப்பெண் வழங்கப்படுவது, அசல் விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி நடந்துள்ளதா அல்லது மறுகூட்டலின்போது குளறுபடி நடந்துள்ளதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி கூறுகையில், "இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழைய விடைத்தாள் திருத்தும் முறையை நாங்கள் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
ஆனால், சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தும் முறையில் இவ்வளவு நாட்களாக முறைகேடு நடந்துள்ளதாகவே, மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications