மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?
மகேந்திரசிங் தோனி. இந்த ஒற்றை சொல் கடந்த பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை வசீகரித்துக் கொண்டிருக்கிறது.
மிக சாதாரண பின்புலத்திலிருந்து வந்த தோனி, 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து, இப்போது வரை ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை தன் அதிரடி விக்கெட் கீப்பிங்கினாலும், ஹெலிகாப்டர் ஷாட் சிக்சர்களாலும், அட்டகாசமான கேப்டன்சியாலும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
என்ன தான் புகழ் வெளிச்சத்தின் உச்சத்தில் இருந்தாலும், ஐசிசி கோப்பைகள், ஐபிஎல் கோப்பைகள் என வரிசை கட்டி வென்றிருந்தாலும், ஓய்வு பெறுவது குறித்த சர்ச்சைகள் அவரை சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
கடந்த 2014 டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2020 ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஸ்தம்பிக்க வைத்தார்.
மகேந்திர சிங் தோனியை இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வழியாகத் தான் களத்தில் பார்க்க முடிகிறது. ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிதான் தலைவராக பல வெற்றிகளை குவித்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று ஒன்பது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது சென்னை அணி.
கடந்த ஐபிஎல் 2020 சீசனில், சென்னை அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அப்போது "நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம். அதற்குத்தான் நாங்கள் அறியப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார் தோனி.
- IPL 2021: சொன்னதை செய்த தோனி; 40 வயதிலும் கோப்பையை வசமாக்கிய கேப்டன் கூல்
- டி20 உலகக் கோப்பைக்கு சம்பளம் வாங்காமல் பணிபுரியும் தோனி: நெகிழும் ரசிகர்கள்
அவர் சொன்னது போலவே, இந்த ஐபிஎல் 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதே போல இறுதிப் போட்டிக்கும் முதல் அணியாக தகுதி பெற்றது.
எல்லாவற்றையும் தாண்டி, வலுவான கொல்கத்தா நைட் ரைடர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அத்தனைக்கும் மூல முக்கிய காரணம், தோனியும் அவரது தலைமைப் பண்பும்தான்.
அதிவேக அதிரடி ஆட்டம், இளைஞர்களின் ஆட்டம் என்று அறியப்படும் டி20 வடிவத்தில் தன் 40ஆவது வயதில், சென்னைக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்துள்ளார் தோனி.
https://twitter.com/ani_digital/status/1449596247669608452
2007ஆம் ஆண்டில் தோனியின் மடியில் தவழத் தொடங்கிய கோப்பைகள், 2021ஆம் ஆண்டு வரை கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சமீபத்திய ஐபிஎல் வெற்றிக்குப் பிறகும் கூட, தோனியின் ஓய்வு குறித்தும், அவர் சென்னை அணியில் தொடர்வது குறித்தும் சர்ச்சைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
"அணியில் சிலரை தக்க வைத்துக் கொள்வோம் என்பது உண்மைதான். ஆனால் எத்தனை பேரை தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால், ஒரு வீரரை தக்கவைத்துக்கொள்வதற்கான முதல் வாய்ப்பையே தோனிக்குத்தான் பயன்படுத்துவோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலுக்கு தலைவன் தேவை. அவர் மீண்டும் அடுத்த ஆண்டு விளையாடுவார்" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளார்.
ஆக கேப்டன் கூல் தோனியை அடுத்த ஆண்டும் ஐபிஎல் களத்தில் காணலாம்.
பிற செய்திகள்:
- கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?
- பூடான்: தொலைந்த வரலாறை தேடும் 'சந்தோஷ சாம்ராஜ்ஜியம்'
- தென் கொரியாவின் சுயமுகத்தை காட்டும் ஸ்க்விட் கேமின் ஆறு பகுதிகள்
- கேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
- ரஷ்யாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை கடந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?













Click it and Unblock the Notifications