எங்களுக்கு நேரமே சரியில்லை.. அலறும் வட கிழக்கு மாநிலங்கள்
டெல்லி: வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல் பிரதேச முதல்வர் பேமா கண்டு, வட கிழக்கு மாநிலங்களின் டைம் ஸோனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அப்போதுதான் பணித் திறன் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும் கூட வட கிழக்கு மாநிலங்களில் நேர மாற்றம் உள்ளது. ஆனால் மொத்த இந்திய நேரத்தையே இவர்களும் கடைப்பிடிப்பதால் பல குழப்பங்கள் வருகின்றனவாம்.
இதனால்தான் தற்போது தங்களுக்கென தனியாக ஒரு டைம் ஸோன் தேவை என்ற குரல் அங்கு ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பணித்திறனை அதிகரிப்பதோடு மின்சாரத்தையும் சேமிக்க முடியும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.

டைம் வேஸ்ட் ஆகுது
இதுகுறித்து பேமா கண்டு கூறுகையில் நாங்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறோம். அரசு அலுவலகங்கள் 10 மணிக்குத்தான் தொடங்குகின்றன. மாலை 4 மணிக்கு முடிகின்றன. மின்சாரத் தேவை அதிகமாக உள்ளது. மின்சாரச் செலவும் அதிகமாகவே உள்ளது என்றார்.

மிச்சப்படுத்தலாம்
சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த தேசிய மேம்படுத்தப்பட்ட ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வின்படி நேர மாற்றம் செய்யப்பட்டால் வட கிழக்கு மாநிலங்களில் 2 கோடி மின்சார யூனிட்டுகளை சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு திட்டக் கமிஷனும் கூட வட கிழக்கு மாநிலங்களுக்கு தனி டைம் ஸோன் தேவை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தருண் கோகாயும் கூட
கடந்த 2014ம் ஆண்டு அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயும் கூட தனி டைம் ஸோன் கோரிக்கையை வைத்திருந்தார். இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுமானால் வழக்கமான இந்திய நேரத்தை விட வட கிழக்கு மாநிலங்களில் ஒரு மணி நேரம் முன்னால் செல்லும். அதாவது இந்தியாவின் இதரப் பகுதிகளில் காலை 10 மணி என்றால், இங்கு காலை 11மணியாக இருக்கும் என்று தெரிகிறது.

பல நாடுகளில் உள்ளது
உலகின் பல நாடுகளில் இப்படி மாறுபட்ட டைம் ஸோன்கள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யாவில் பல்வேறு விதமான டைம் ஸோன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இந்தியாவும் சேருமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications