மோடி பிரதமரானால் அமைச்சரவையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இடம் தருவாரா?
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி அமைச்சரவை குறித்த ஆலோசனைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மோடி பிரதமரானால் அவரது அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது ஒட்டுமொத்த ஊடகங்களின் கருத்து கணிப்பு. பாரதிய ஜனதாவும் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று கருதி அமைச்சரவை தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட போது கடுமையாக எதிர்த்தவர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும். மோடிக்கு எதிராக இந்த இருவரின் கலகக் குரல் பாஜகவுக்குள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அத்வானி, ஜோஷி சீனியர்கள்
மோடியைவிட கட்சியிலும் வயதிலும் மூத்தவர்கள் இருவரும். கட்சியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு கீழே பணியாற்றவர் மோடி. அதனால் மோடி பிரதமரானால் அவருக்கு கீழே இப்போது அமைச்சரவையில் இருவரும் இடம்பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருவரை சரிகட்ட ஆர்.எஸ்.எஸ். தீவிரம்
இந்த இருவரையும் எப்படி சரி கட்டுவது என்பது குறித்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் ஆலோசித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருவரையும் சரிகட்டி சமாதானப்படுத்தும் வகையில் 75 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறதாம்.

தே.ஜ. கூ தலைவராக அத்வானி நீடிப்பு
அதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா இருந்தது போல் அத்வானியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தொடர்ந்து நீடிக்க செய்வது என்பதும் பாஜகவினரின் திட்டமாக இருக்கிறது.

ஜோஷிக்கு கட்சிப் பொறுப்பு
அத்துடன் முரளி மனோகர் ஜோஷியை கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றை கொடுத்துவிட்டு அவரை அப்படியே ஓரம்கட்டிவிடுவது என்பதும் மோடி ஆதரவாளர்களின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

அத்வானி, ஜோஷியுடன் கட்காரி பேச்சு
இந்த நிலைப்பாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அத்வானியிடமும் ஜோஷியிடமும் நேற்று நிதின் கட்காரி ஆலோசனை நடத்தியிருக்கிறார். இருப்பினும் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.

அடக்கி வைக்க தீவிரம்
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே இருவரையும் சமாதானப்படுத்தி கலகக் குரல் எழுப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்ற மோடி ஆதரவாளர்களின் முயற்சி மும்முரமாக தொடர்ந்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications