ஆப்கன் பலாத்கார வழக்கு: ஐ.நா. மனித உரிமை ஆணைய எதிர்ப்பையும் மீறி 5 பேருக்கு தூக்கு நிறைவேற்றம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளனர் அதிகாரிகள்.
இவர்கள் ஐந்து பேரையும் தூக்கிலிடுவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ஐந்து பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், போலீஸ் சீருடையில் வந்த சிலர், பக்மான் என்ற இடத்தில் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அதில் ஒரு குடும்பத்தினர் இருந்தனர். அவர்களை மிரட்டி வெளியே கொண்டு வந்த அந்தக் கும்பல், அதில் இருந்த நான்கு பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்தனர். அதில் ஒரு பெண் கர்ப்பிணி ஆவார். காரில் இருந்த ஆண்களை அருகில் இருந்த ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அவர்கள் கண் முன்பாகவே இந்த அக்கிரமம் நடந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் 7 பேரைக் கைது செய்தனர். அதில் விசாரணைக்குப் பின்னர் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஐந்து பேருக்குத்தான் தற்போது தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
முன்னதாக, இந்த தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஜீத் ராத் ஜீத் அல் ஹுசேன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் ஐந்து பேர் மீதான வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை. ஐந்து பேரையும் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்று ஹுசேன் குற்றம் சாட்டியிருந்தார்.
இருப்பினும் இந்த ஐந்து பேரையும், காபூலுக்கு வெளியே உள்ள புல் இ சக்ரி சிறை வளாகத்தில் தூக்கிலிட்டுள்ளனர் அதிகாரிகள், கனி புதிய அதிபராக பதவியேற்ற 10 நாளில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஐந்து பேர் மீதான விசாரணை கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் முடிவடைந்தது. சில மணி நேரங்களில் இந்த விசாரணை நடந்து முடிந்தது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இவர்களைத் தூக்கிலிடும் உத்தரவை முந்தைய அதிபரான ஹமீத் கர்ஸாய் செப்டம்பர் 27ம் தேதி பிறப்பித்திருந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்த்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications