எமிஷன் டெஸ்ட் மோசடி.. ஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது!
Recommended Video

பெர்லின்: டீசல் எமிஷன் (வாகனத்தின் புகை உமிழ்தல்) மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, 'ஆடி' கார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆடி. ஆடம்பர கார்கள் ஆடி பிராண்டின்கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வோக்ஸ்வேகன் கார்களில் எமிஷன் சோதனையில் முறைகேடு நடைபெறும் வகையில் அதில் கருவிகள் இருந்தது அம்பலமானது.

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தங்களின் 600,000 கார்களில் இந்த கருவி பொருத்தப்பட்டதாக ஜெர்மனியின் முன்னணி கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் ஒப்புக்கொண்டது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
11 மில்லியன் டீசல் கார்களில் மோசடியுடன் கூடிய சாப்ட்வேர் இணைக்கப்பட்டதாகவும், எப்போது கார்கள் சோதனை செய்யப்பட்டன எப்போது எமிஷன் குறைத்து காட்டப்பட வேண்டும் என்பதெல்லாம் பதிவாகியுள்ளது அந்த சாப்ட்வேர் என்றும், வோக்ஸ்வேகன் தெரிவித்திருந்தது.
சோதனை கூடத்தில் சோதித்து பார்க்கும்போது இருப்பதைவிட, சாலைகளில் ஓடத் தொடங்கிய பிறகு வோக்ஸ்வேகன் கார்கள் சுமார் 40 மடங்கு அதிக புகையை உமிழக் கூடியவையாக இருந்தது தெரியவந்தது.
இந்த மோசடி ஆடி நிறுவன கார்ககளிலும் அரங்கேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆடியின் ஏ6 மற்றும் ஏ7 மாடல்களின் 60,000 கார்களில் டீசல் இன்ஜின் எமிஷன் சாப்ட்வேர்களில் பிரச்சனை ஏற்பட்டது என்பதை ஆடி நிறுவனம் ஒப்புக்கொண்டது. கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறி, 8,50,000 கார்களை ஆடி நிறுவனம் திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில்தான் 'ஆடி' கார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதை வோக்ஸ்வேகன் செய்தித்தொடர்பாளரும் அறிவித்துள்ளார். சாட்சியங்களை அவர் கலைத்துவிட கூடும் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக முனிச் நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications