இலங்கை தமிழர் இனப்படுகொலை- மகிந்த, கோத்தபாய ராஜபக்சே உட்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய அதிரடி தடை
டொராண்டோ: இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா நாட்டுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது.
இலங்கையில் சர்வதேச சட்டவிதிகளின் படி தனி தேசிய இனமான ஈழத் தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரி போராடினர். இதனையடுத்து தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலான இந்த ஆயுதப் போராட்டம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம். குறிப்பாக 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதி கோரி சர்வதேச விசாரணை மற்றும் மனித உரிமை அமைப்புகளை தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நிகழ்த்தியதற்காக ஜனாதிபதிகளக இருந்த மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது. கோத்தபாய, மகிந்த ராஜாக்சே இருவரும் ஜனாதிபதிகளாக இருந்தனர். பின்னர் மகிந்த ராஜபக்சே பிரதமரானார். கோத்தபாய ஜனாதிபதியானார். இருவரும் பதவியில் இருந்த போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியது. இதனால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் மகிந்த, கோத்தபாய ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலகி உயிருக்கு அஞ்சி தப்பி ஓடினர். இந்த நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ராஜபக்சே சகோதரர்களான கோத்தபாய, மகிந்த ராஜபக்சேக்களுக்கு கனடா அதிரடி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications