இலங்கை தமிழர் இனப்படுகொலை- மகிந்த, கோத்தபாய ராஜபக்சே உட்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய அதிரடி தடை
டொராண்டோ: இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா நாட்டுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது.
இலங்கையில் சர்வதேச சட்டவிதிகளின் படி தனி தேசிய இனமான ஈழத் தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரி போராடினர். இதனையடுத்து தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலான இந்த ஆயுதப் போராட்டம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம். குறிப்பாக 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதி கோரி சர்வதேச விசாரணை மற்றும் மனித உரிமை அமைப்புகளை தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நிகழ்த்தியதற்காக ஜனாதிபதிகளக இருந்த மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது. கோத்தபாய, மகிந்த ராஜாக்சே இருவரும் ஜனாதிபதிகளாக இருந்தனர். பின்னர் மகிந்த ராஜபக்சே பிரதமரானார். கோத்தபாய ஜனாதிபதியானார். இருவரும் பதவியில் இருந்த போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியது. இதனால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் மகிந்த, கோத்தபாய ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலகி உயிருக்கு அஞ்சி தப்பி ஓடினர். இந்த நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ராஜபக்சே சகோதரர்களான கோத்தபாய, மகிந்த ராஜபக்சேக்களுக்கு கனடா அதிரடி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications