இலங்கை தமிழர் இனப்படுகொலை- மகிந்த, கோத்தபாய ராஜபக்சே உட்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய அதிரடி தடை
டொராண்டோ: இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா நாட்டுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது.
இலங்கையில் சர்வதேச சட்டவிதிகளின் படி தனி தேசிய இனமான ஈழத் தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரி போராடினர். இதனையடுத்து தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலான இந்த ஆயுதப் போராட்டம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம். குறிப்பாக 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதி கோரி சர்வதேச விசாரணை மற்றும் மனித உரிமை அமைப்புகளை தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நிகழ்த்தியதற்காக ஜனாதிபதிகளக இருந்த மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது. கோத்தபாய, மகிந்த ராஜாக்சே இருவரும் ஜனாதிபதிகளாக இருந்தனர். பின்னர் மகிந்த ராஜபக்சே பிரதமரானார். கோத்தபாய ஜனாதிபதியானார். இருவரும் பதவியில் இருந்த போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியது. இதனால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் மகிந்த, கோத்தபாய ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலகி உயிருக்கு அஞ்சி தப்பி ஓடினர். இந்த நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ராஜபக்சே சகோதரர்களான கோத்தபாய, மகிந்த ராஜபக்சேக்களுக்கு கனடா அதிரடி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications