தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 இந்தியர்கள் கப்பல் நைஜீரியாவில் சிறைபிடிப்பு- மீட்க கோரிக்கை!
அபுஜா: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 பேருடன் நைஜீரியா கடற்படையால் கச்சா எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து 16 இந்தியர்களை பாதுகாப்ப மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நார்வே நாட்டை சேர்ந்த தனியார் கப்பல் MV HEROIC IDUN. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 16 இந்தியர்கள், 8 ஈழத் தமிழர்கள் என மொத்தம் 26 பேர் பணியாளர்களாக பணிபுரிந்தனர்.

இக்கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக நைஜீரியா நாட்டுக்கு சென்றது. நைஜீரியாவை இக்கப்பல் சென்றடைந்த நிலையில் கடற்கொள்ளையர்கள், இந்தியர்களின் கப்பலை சுற்றி வளைக்க பின் தொடர்ந்தனர். இதனால் உயிர் தப்பிக்க கினியா நாட்டின் தீவு பகுதிக்குள் அக்கப்பல் நுழைந்தது. இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
தங்களது நாட்டில் அத்துமீறி கப்பல் நுழைந்ததால் 2.5 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது கினியா. இத்தொகையை கினியாவுக்கு நார்வே கப்பல் செலுத்திவிட்ட நிலையில் நைஜீரியாவிடம் அக்கப்பல் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 16 இந்தியர்கள் தற்போது நைஜீரிய கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

நைஜீரியாவோ, கச்சா எண்ணெய் திருட்டில் நார்வே கப்பல் ஈடுபட்டது; ஆகையால் அந்த கப்பல் தொடர்பாக விசாரணைகள் நடத்தி வருகிறோம் என்றது. இது தொடர்பக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நைஜீரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 16 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே நைஜீரியா கடற்படையிடம் சிக்கி உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நைஜீரியா கடற்படையிடம் பிரிஸ்பன் - தூத்துக்குடி, ராஜன் தீபன்பாபு- சென்னை, சுகுமார்-ராமாபுரம் ஆகியோர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிடம் பேச வேண்டும்; நைஜீரியாவில் தத்தளித்து வரும் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications