சீசனுக்கு சீசன் தாக்குமா? பருவகால நோயாக மாறுகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு பரபர தகவல்
ஜெனீவா: ‛‛கொரோனா இன்னும் முடியவில்லை எனவும், அதிர்ஷ்டவசமாக பருவகால நோயாக கொரோனா மாறவில்லை'' என்பன உள்பட பல்வேறு விஷயங்களை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது.
கொரோனா பரவல் இந்தியாவில் தற்போது குறைந்து வருகிறது. மத்திய அரசின் அறிவுரைப்படி கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கும் முறை கைவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் சீனா உள்பட இன்னும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு உள்ளது. சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ்வப்போது உலக சுகாதார நிறுவனம் கொரோனா பரவல் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.

இன்னும் முடியல
அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் கொரோனா பரவல் குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ‛‛கொரோனா பரவலில் உலகம் தற்போது துவக்க கட்டத்தை தான் தாண்டி உள்ளது. கொரோனா வைரஸின் நிலைத்திருக்கும் தன்மை, பரவல் வேகம், தீவிரத்தன்மை தற்போது வரை குறைந்ததாக தெரியவில்லை. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை உலக நாடுகள் கைவிட்டு இருப்பது கவலையளிக்கிறது. கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளில் 99.2 சதவீதம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா இன்னும் முடியவில்லை. தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும்'' என்றார்.

யாரும் நம்ப வேண்டாம்
உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை பிரிவின் திட்ட இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், ‛‛கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. பரவல் வேகம், பாதிப்பு சதவீதம் குறைந்தால் வைரஸ் ஒழிந்துவிட்டது என அர்த்தமாகாது. இதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் கொரோனா பேரிடர் முடிந்துவிட்டது என யாரும் நம்ப வேண்டாம்.

பருவகால நோயா கொரோனா
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக என்டமிக் நிலையை கொரோனா எட்டவில்லை. காசநோய், மலேரியா போன்று உள்ளூர் நோயாகவும், பருவகாலத்தில் பரவும் நோயாகவும் மாறவில்லை. 2020ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்தை எடுத்து கொண்டால் கடந்த ஒரு வாரத்தில் தான் குறைந்தபட்ச இறப்பு பதிவாகி உள்ளது. இருப்பினும் இது 20,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை வரும் நாட்களில் குறைய வேண்டும்'' என்றார்.
Recommended Video

விழிப்புடன் தடுப்பு நடவடிக்கை
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகயைில், ‛‛கொரோனா பரவல் துவங்கி தற்போது வரை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கி உள்ளது. நாம் இன்னும் கொரோனா பரவலின் மத்தியில் தான் இருக்கிறோம். இதனால் அலட்சியம் கூடாது. விழிப்புணர்வுடன் தடுப்பு நடவடிக்கை தேவை'' என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications