இங்கிலாந்தில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைகிறது!
லண்டன்: இங்கிலாந்துக்கு படிக்கவும் பணிபுரியவும் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது;
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று படிப்பதும் பணிபுரிவதும் அதிகரித்து வந்தது. ஆனால் அண்மைய ஆய்வு ஒன்றில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2011-ல் எத்தனை பேர்?
இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்தியா உட்பட புதிய காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 1,51,000 பேர் இங்கிலாந்துக்கு குடியேறி இருந்தனர்.

2012ல் குறைந்தது
ஆனால் 2012ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 97 ஆயிரமாக குறைந்துள்ளது.

கெடுபிடிகளே காரணம்
இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கிலாந்தில் படிப்புக்காக விண்ணப்பிக்கும் போது கெடுபிடிகள் அதிகரிப்பதாலேயே அந்நாட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது/

யுஎஸ், ஆஸி.யைவிட ...
இதேபோல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை விட கல்விக் கட்டணமும் இங்கிலாந்தில் அதிகம் என்பதும் ஒரு காரணமாகும்.

படிக்க வந்தவர்கள் எண்ணிக்கை
படிப்பதற்காக கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றோர் எண்ணிக்கை 2,32,000. ஆனால் நடப்பாண்டிலோ 1,80,000தானாம்.

14 ஆண்டுகளில் குறைவு
கடந்த 14 ஆண்டுகளில் நடப்பாண்டில்தான் வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications