For Daily Alerts
Just In
ஆசியாவின் நோபல் 'மகசேசே' விருது பெறுகிறார் 82 வயது ஈழத்தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம்
மணிலா: ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஈழத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர் கெத்சி சண்முகம்.
பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர் நாட்டவருக்கும் இந்த விருது பர்கிந்து வழங்கப்படுகிறது.
English summary
A 82-year-old Eelam Tamil teacher Gethsie Shanmugam who counseled war widows and orphans to overcome their nightmares are among the six winners of this year’s Ramon Magsaysay Awards.
Story first published: Friday, July 28, 2017, 11:37 [IST]