“பாகிஸ்தானுக்காக இந்தியா” – டுவிட்டரையே நெகிழ வைத்து மனதால் ஒன்றிய இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும்
பாகிஸ்தான்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் சின்னஞ்சிறு குழந்தைகள் மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானியர்களுக்கு, டுவிட்டர் மூலமாக உங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்று நெகிழ்ச்சி தருணத்தைக் காட்டியுள்ளனர் இந்தியர்கள்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை தாலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் தொடங்கியது முதலே டுவிட்டரில் #PeshawarAttack என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.

ஆதரவுக் கரம்:
இந்தக் கொடூரத் தாக்குதலின் தன்மை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் டுவிட்டரில் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் இட்ட பதிவுகளின் எண்ணிக்கை மிகுதியாகத் தொடங்கியது.
உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்:
இதையடுத்து, இந்திய அளவிலான டுவிட்டர் ட்ரெண்டிங்கில் "பாகிஸ்தானுடன் இந்தியா" எனப் பொருள்தரும் #IndiawithPakistan என்ற ஹேஷ்டேக் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
சகோதரத்துவம் பாராட்டிய இருதரப்பினர்:
இந்தியர்கள் தங்களது ஆறுதல் வார்த்தைகளை சகோதரத்துவத்துடன் பகிர்ந்தவண்ணம் இருந்தனர். இது, உலக அளவில் ஊடகங்களால் செய்திகளாகப் பதிவாகின.
இனம் கடந்து தழைத்த மனிதம்:
அதேபோல், இதே ஹேஷ்டேக்கை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் மக்கள் ட்விட்டரில், இந்தியர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இந்தியர்களின் ஆறுதல் வார்த்தைகளானது நாடு, மொழி, இனம் கடந்து மனிதம் தழைப்பதை உணர்த்துவதாக, அவர்களில் பலர் பதிவிட்டனர்.
பதிலுக்கு நெகிழ வைத்த பாகிஸ்தானியர்:
குறிப்பாக, இந்தியர்களின் சோகம் மிகுந்த பதிவுகளுக்கு "சகோதர, சகோதரிகளே உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பாகிஸ்தானியர்கள் பதில் பதிவுகள் செய்துள்ளனர்.
தோளோடு தோள் தருவோம்:
எல்லா இடையூறுகளையும் கடந்து தோளோடு தோள் தாங்கி நிற்கும் இந்த மனிதத் தன்மைதான் இன்னும் நம்மை சிறிதேனும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. எந்த பிரச்சனைகளுக்கு இரு தரப்பு மக்களும் காரணமில்லை.
மனதால் நாங்கள் ஒன்றுதான்:
சுயநலம் பிடித்த சில தீவிரவாதிகள்தான் காரணம்.. மனதால் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றுபட்டுதான் உள்ளனர் என்பதைத்தான் பிரதிபலித்துள்ளன இந்த மனதை உருக்கும் டுவிட்டர் பதிவுகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications