2-வது உலகப் போரின் 75-வது ஆண்டு வெற்றி விழா- மாஸ்கோ அணிவகுப்பில் இந்திய ராணுவம் பங்கேற்பு
மாஸ்கோ: 2-வது உலகப் போரின் 75-வது ஆண்டு வெற்றி விழாவை முன்னிட்டு ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி விழா அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.
1941-1945 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் 2-வது உலகப் போரில் வென்றது. இந்த வெற்றியின் 75-வது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது.

மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இன்று நடைபெற்ற, வெற்றி தின அணிவகுப்பில் இந்திய இராணுவப் படையினர் பங்கேற்றனர். அனைத்து அணிகளையும் சேர்ந்த 75 பேர் கொண்ட இந்திய இராணுவப் படையின் முப்படை சேவை பிரிவு, ரஷ்ய இராணுவபடை மற்றும் 17 பிற நாடுகளின் படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.
2-வது உலகப் போர் பின்னணி
இரண்டாம் உலகப் போரின்போது, மிகப்பெரிய அளவிலான நேசநாடுகளின் படைகளில் ஒன்றாக பிரிட்டிஷ் இந்திய இராணுவப் படைகள் இருந்தன. இவை வல்லரசு சக்திகளுக்கு எதிராக வடக்கு - கிழக்கு ஆப்பிரிக்க இயக்கம், மேற்கு பாலைவன இயக்கம், ஐரோப்பிய தியேட்டர் ஆகியவற்றில் பங்கேற்றன.
இதில் 87 ஆயிரம் இந்தியப் படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். 34, 354 பேர் காயமடைந்தனர். இந்திய இராணுவம் எல்லா முன்னணி நிலையிலும் போரிட்டது. அது மட்டுமல்லாமல் தெற்கு, ஈரானிய வழிப்பாதை, லெண்ட் லீஸ் பாதை ஆகியவை மூலமாக ஆயுதங்கள், போர்க்கருவிகள், உதிரி பாகங்கள், உணவு ஆகியவற்றை சோவியத் யூனியன், ஈரான், ஈராக் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதையும் உறுதி செய்தது.
18 விக்டோரியா ஜார்ஜ் கிராஸ் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாராட்டு விருதுகள் இந்திய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் இந்திய இராணுவப் படையினரின் வீரத்தைப் பாராட்டி, சோவியத் யூனியன் 1944 அன்று ராயல் இந்திய இராணுவ படைப் பிரிவைச் சேர்ந்த சுபேதார் நாராயணராவ் நிக்கம், ஹவில்தார் கஜேந்திர சிங் சந்த் ஆகியோருக்கு சோவியத் யூனியனின் உயரிய ஆட்சிக் குழுவின் மிகைல் காலினின், அலெக்சாண்டர் கார்கின் ஆகியோர் கையெழுத்திட்ட மிக உயரிய விருதான சிவப்பு நட்சத்திர விருதுக்கான ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications