கோமாவில் மொஜ்தபா கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்.. ஷாக் தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. கடந்த மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக போரை தொடங்கியது . இதில் அயதுல்லா அலி கமேனி பலியானார். இதையடுத்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் தலைவர்களை அமெரிக்கா, இஸ்ரேல் கொன்றது.

அதன்பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார். இவர் மறைந்த உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் ஆவார்.
பிரிட்டிஷ் நாளிதழ்
இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்து காலை இழந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழ் 'தி சன்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ''படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனியை தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி உயர்மட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் இக்கட்டான நிலையில் சிக்கி உள்ளார்.
வயிறு - கல்லீரலில் கடும் பாதிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனிக்கு வயிறு அல்லது கல்லீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மூத்த அறுவை சிகிச்சை நிபுணரும் ஈரான் சுகாதார அமைச்சருமான முகமது ரெஸா ஜாஃபர்கண்டி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
கோமா நிலையில் இருப்பதாக..
பிப்ரவரி 28 அன்று அவரது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்தாரா என்பது பற்றி தெளிவு இல்லை. இருப்பினும் தற்போது அவர் ஈரானின் போர் வியூகத்தை வழிநடத்தவில்லை. இதுதான் உலகளாவிய எரிபொருள் விஷயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த ஒருவர், 'மொஜ்தபா கமேனிக்கு ஒன்று அல்லது 2 கால்கள் அகற்றப்பட்டுள்ளது. கல்லீரல், வயிறு சிதைந்துள்ளது. அவர் கோமா நிலையிலும் இருக்கிறார்'' என கூறியுள்ளார்.
வெளியான அறிக்கை
இருப்பினும் மொஜ்தபா கமேனி பற்றி ஈரான் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்கிடையே தான் மொஜ்தபா கமேனி முதல் முறையாக நடக்கும் போர் விவகாரம் பற்றி நாட்டு மக்களுக்கு செய்தி வழங்கினார். தொலைக்காட்சியில் அவர் நேரில் தோன்றி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொஜ்தபா கமேனி பெயரில் வெளியான அறிக்கையை மட்டுமே ஈரான் தொலைக்காட்சிகள் செய்தி வாசிப்பாளர் மூலமாக ஒளிபரப்பியது. இதனால் உண்மையில் மொஜ்தபா கமேனி கோமா நிலையில் உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்!












Click it and Unblock the Notifications