சைப்ரஸ் நாட்டில்.. பிரிட்டன் ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல்! முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈரான்
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் அமெரிக்கா மட்டுமல்ல, பிரிட்டனும் ராணுவ தளத்தை வைத்திருக்கிறது. அதில் முக்கியமானதுதான் சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் தளம். இதன் மீது ஈரான் தற்போது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
தெற்கு சைப்ரஸில் உள்ள பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் அக்ரோட்டிரி விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு ஈரான் ட்ரோன் விழுந்து நொறுங்கியதாக சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் கூறியுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு பறந்த உத்தரவு
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விமானப்படைத் தளத்திற்கும் மிகக் குறைந்த சேதமே உண்டானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகமும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தளத்தில் வசிக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை வேறு இடங்களுக்கு மாற்றப் போவதாகவும் தெரிவித்தது.
ட்ரோன் தாக்குதல்
இன்று, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் மேலும் தீவிரமடைந்தன. அக்ரோட்டிரி பகுதியில் மீண்டும் சைரன்கள் ஒலித்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, பிரிட்டன் போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அங்குள்ள ஊழியர்களுக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் ராணுவம் அறிவுத்தியுள்ளது.
பதுங்கு குழிக்குள் இருக்க அறிவுறுத்தல்
பிரிட்டன் தனது ராணுவ வீரர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், "ஜன்னல்களில் இருந்து விலகி நில்லுங்கள். பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள். அடுத்த அறிவுறுத்தலுக்காகக் காத்திருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ராயல் ஏர் ஃபோர்ஸ் அக்ரோட்டிரியை நோக்கி வந்த மேலும் இரண்டு ட்ரோன்கள், விமானப்படைத் தளத்தை வந்தடைவதற்கு முன்பே வழிமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக சைப்ரஸ் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்?
இதற்கிடையில், பாஃபோஸ் சர்வதேச விமான நிலைய வான்வெளியில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன் ஒன்று கண்டறியப்பட்டதால் எச்சரிக்கை ஒலித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த ட்ரோன் பிரிட்டிஷ் தளத்தின் மீதான தாக்குதலுடன் தொடர்புடையதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக அமெரிக்காவுடன் நாங்கள் ஈரானுக்கு எதிராக நிற்கிறோம் என்று பிரிட்டன் கூறியிருந்தது. இதனையடுத்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்!












Click it and Unblock the Notifications