இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்: இன்று காலை முதல் 72 மணி நேர போர் நிறுத்தம்
ஜெருசலேம்: காஸா பகுதியில் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
காஸா முனை மீது கடந்த மாதம் 8ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் ஒரே சேர நடத்தியது.

தீவிரப்படுத்திய இஸ்ரேல்
போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலகளாவிய அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை ஏற்காதவிதத்தில் காஸாமுனை மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவது என்று இஸ்ரேல் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

அப்பாவிகள் அதிகம் சாவு
காஸாமுனையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,432 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள்தான். இஸ்ரேல் வீரர்களில் 56 பேரும், பொதுமக்களில் 3 பேரும் இறந்துள்ளனர்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தலையீடு
காஸா பகுதியில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்துவருகிறது. காஸா பகுதியில் அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதும் மிகுந்த வேதனை அளிப்பதால் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்தது.

ஹமாஸ் பிடிவாதம்
காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே நிரந்தரமாக சண்டை நிறுத்தம் சாத்தியம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

போர் நிறுத்தம்
இந்நிலையில், காஸாவில் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் போரை நிறுத்திக் கொள்ள இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளன. இருதரப்பினரும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த கெய்ரோ செல்கின்றனர்.

ஐ.நா., அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய செயலாளர் பான் கி மூன் இணையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் பரிந்துரையை ஏற்று போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் பலமாக உள்ள ஹமாஸ் இயக்கமும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

அப்பாவி மக்களுக்காக...
"மனிதாபிமான அடிப்படையில் யுத்தநிறுத்தம் தொடங்கும் வரையில் இருதரப்பினரும் அமைதியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். போர் நிறுத்த வேலையில் இரு தரப்பினரும் தமது வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டும். நீண்ட வன்முறைக்கு இடையே, பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களுக்கு இடை ஓய்வு மிகவும் அவசியமானது. இந்த போர் நிறுத்தம் அப்பாவி பொதுமக்களுக்காக கொண்டுவரப்படுகிறது" என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் கூட்டாக தெரிவித்துள்ளன.
-
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
ஈரான் உளவு துறை மாஸ்டர் மைண்ட் காலி.. முதுகை உடைத்த இஸ்ரேல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு -
"ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!" லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான் -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications