விர்ர்ர்ர்ர்ரென்று 'கிராஸ்' செய்த 'பறக்கும் தட்டு'... தட்டுத் தடுமாறித் தப்பிய ஜெட் விமானம்!
லண்டன்: ஒரு பெரிய ரக்பி பந்து போல காணப்பட்ட பறக்கும் தட்டு தனது விமானத்தின் மீது மோதுவது போல வந்ததாகவும், நிமிடத்தில் சுதாரித்து தனது விமானத்தை வேறு பக்கம் திருப்பியதால் பேராபத்திலிருந்து விமானமும், பயணிகளும் தப்பியதாகவும் ஒரு விமானி கூறியுள்ளார்.
இவரது இந்த கூற்றால் லண்டன், ஹீத்ரு விமா்ன நிலைய அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையில் விமானத்தின் மீது மோதுவது போல வந்தது விண்ணிலிருந்து வந்த பறக்கும் தட்டா.. அல்லது வேறு ஏதேனுமா என்ற விசாரணையில் அவர்கள் குதித்துள்ளனர்.

ஹீத்ரு விமா்ன நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏ320 ஏர்பஸ் விமானத்தின் பைலட் இங்கிலாந்து விமானத்துறை அதிகாரிகளிடம் கூறுகையில், நிச்சயம் அது எனது விமானத்தின் மீது மோதுவது போலவே வந்தது. என்னை நோக்கித்தான் அது வந்தது.
எனது விமானத்திற்கு சில அடிகள் முன்பு வரை அது நெருங்கியபோதுதான் அதைக் கவனித்தேன். உடனே சுதாரித்து விமானத்தைத் திருப்பியதால் மோதலிலிருந்து விமானம் தப்பியது என்று கூறியுள்ளார்.
ஆனால் அப்படி எந்தவொரு மர்ம விமானமும், இந்த விமானம் அருகே போனதாக தகவல் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகளின் விசாரணை கூறுகிறது. எந்த ஒரு மர்மப் பொருளும் விமான நிலைய கண்காணிப்பு ரேடாரில் சிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சம்பவம் நடந்தபோது இந்த விமா்னம் தரையிலிருந்து 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து 32 கிலோமீட்டர் மேற்கில் அது வந்து கொண்டிருந்தது. அந்த இடம் பெர்க்ஷயர் கிராமமாகும்.
உண்மையில் வந்தது என்ன என்பது தற்போது தீவிர ஆய்வுக்குள்ளாகியுள்ளதாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications