மலேசியா ஊழல் வழக்கு- மாஜி பிரதமர் நஜீப்-க்கு 12 ஆண்டு சிறை- ரூ370 கோடி அபராதம்- பிரம்படியில் விலக்கு
கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ370 கோடி (21 கோடி ரிங்கிட்) அபராதமும் விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு அளித்திருக்கிறது.
மலேசியாவில் 2009-ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தவர் நஜீப் ரசாக். மலேசியாவின் அரசு முதலீட்டு நிதி (1 MDB)யில் பல்லாயிரம் கோடி முறைகேடு உள்ளிட்ட 7 ஊழல் குற்றச்சாட்டுகள் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பட்டன.

இது தொடர்பான வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நஜீப் மீதான 3 மோசடி குற்றச்சாட்டுகள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான 3 குற்றச்சாட்டு என மொத்தம் 7 குற்றச்சாட்டுகளையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனால் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் 21 கோடி ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ370 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனி தண்டனை விதிக்கப்பட்டிருப்பினும் ஏக காலத்தில் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதும் தீர்ப்பு.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முகமது நஸ்லான் முகமது இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் நஜீப்பின் வயது முதுமையை சுட்டிக் காட்டி அவருக்கு பிரம்படி தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் நீதிபதி முகமது நஸ்லான் முகமது கூறினார். மலேசியாவில் பிரதமர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே நஜீப் ரசாக் தமக்கான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மனு மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications