வாக்குச்சாவடிய கைப்பற்றிட்டாங்க.. மறுவாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தை நாடிய மணிப்பூர் கட்சிகள்
இம்பால்: மணிப்பூரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவில் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
முதற்கட்ட தேர்தலில் 78.03 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மணிப்பூரில் சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டது.

வாக்குப்பதிவு
மணிப்பூரில் உள்ள 38 தொகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 78.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. காங்போக்பியில் அதிகபட்சமாக 82.97% வாக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து இம்பாலில் 82.19% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு 86% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி உயிரிழப்பு
இந்நிலையில் மணிப்பூரில் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திபைமுக் சட்டமன்றத் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நௌரெம் இபோச்சௌபா உயிரிழந்தார். காவலர் ஒருவரது சர்வீஸ் ரைஃபிள் எதிர்பாராத விதமாகத் தவறுதலாக வெடித்துச் சிதறியது. இதில் அவர் உயிரிழந்தார் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முறைகேடு
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெங்கெல்ப் தொகுதியில் 27 வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடு நடந்திருக்கிறது. கெய்ரோ தொகுதியின் எட்டு வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடு நடந்திருக்கிறது. அதனால் இங்கெல்லாம் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மணிப்பூர் மாணவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

புகார்
இதையடுத்து என்.பி.பி, காங்கிரஸ், சிவ சேனா, ஜேடி உள்ளிட்ட கட்சிகள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கின்றன. வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு மையங்களை சிலர் கைப்பற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆட்சியில் இருக்கும் பாஜக எந்த புகாரும் கொடுக்கவில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications