எல்லையில் போர் பதற்றம்... ஜெர்மனியில் சீனா அதிபருடன் கை குலுக்கிய மோடி
பெர்லின்: ஜி20 நாடுகள் பங்குபெறும் உச்சிமாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இவ்விரு தலைவர்களும், சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கென் ஷூவாங்கிடம் பத்திரிக்கையாளர்கள் நேற்று கேட்டனர். அவரோ, தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று கூறினார்.
At d BRICS leaders' informal gathering @ Hamburg hosted by China, PM @narendramodi and President Xi had a conversation on a range of issues pic.twitter.com/ervZw46PH0
— Gopal Baglay (@MEAIndia) July 7, 2017
இரு நாடுகள் நடுவே சிக்கிம் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் ராணுவம் அத்துமீறுவதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே சீன அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று ஜி20 மாநாட்டின்போது, தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு சந்திப்பில் கை குலுக்கிக் கொண்டனர். இருவரும் புன்னகையை பரிமாறினர். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட டிவிட்டில், இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி மற்றும் ஜி ஜின்பிங் நடுவேயான பேச்சுவார்த்தை சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications