பாகிஸ்தானில் 15 வயதில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 23 ஆண்டுகள் கழித்து தூக்கு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 15 வயதில் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவருக்கு 23 ஆண்டுகள் கழித்து புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அப்தாப் பகதூர். கிறிஸ்தவரான அவர் 15 வயதில் சபிஹா பாரியா என்ற பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களை கொலை செய்ததாக கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்தாபுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அப்தாபை போலீசார் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தி செய்யாத கொலையை அவர் செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி வைத்துள்ளனர். அப்தாபை அவரது முதலாளி குலாம் முஸ்தபா தான் இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளார் என்று மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்தாபுக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அவர் சிறையில் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நான் ஒரு கலைப் பிரியன். நான் கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் தவித்தேன். என்னை தூக்கிலிடும் நாட்களை எண்ணுவதே மிகவும் வேதனையானது. உண்மையில் நான் தூக்கிலிடப்படும் முன்பு பலமுறை இறந்துவிட்டேன்.
ஒரு கிறிஸ்தவராக இருப்பதால் சிறையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஓவியம் வரைவது மற்றும் கவிதை எழுதுவது தான் என் வேதனையை குறைத்தது.
கடந்த டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள பள்ளி ஒன்றில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தி ஏராளமான குழந்தைகளை கொன்ற பிறகு பாகிஸ்தான் அரசு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதன் பிறகு அப்தாபையும் சேர்த்து மொத்தம் 150 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications