மாத்யூ புயல் எதிரொலி: புளோரிடா மாகாணத்தில் 'எமர்ஜென்சி' - ஒபாமா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
புளோரிடா: அமெரிக்காவை தாக்கியுள்ளது மாத்யூ புயல். இதனையடுத்து புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய பஹாமஸை தாக்கியுள்ளது. அதேபோல ஹைத்தி தீவையும் இந்த புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புயலுக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தற்போது புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் மாத்யூ புயல், அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை புளோரிடாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புளோரிடாவை தொடர்ந்து மாத்யூ புயல் தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications