For Daily Alerts
Just In
தென்னாப்பிரிக்காவில் காண்டாமிருக வேட்டைகாரருக்கு 77 ஆண்டுகள் சிறை!
ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் காண்டாமிருகத்தை வேட்டையாடிய நபருக்கு அதிரடியாக 77 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக காண்டாமிருகங்களைக் கொன்று, அதன் கொம்புகளை வெட்டி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு க்ரூகர் சரணாலயத்தில் மண்ட்லா சௌகே என்பவர் 3 காண்டாமிருக குட்டிகளை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றத்துக்காக இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 77 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நெல்ஸ்ப்ரூயிட் நகர நீதிபதி ஷீலா மிசிபி தீர்ப்பளித்துள்ளார்.
காண்டாமிருக வேட்டையைத் தடுக்கும் வகையில்தான் இப்படி அதிகநாள் சிறைத் தண்டனை விதித்திருப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
Comments
English summary
The South Africa's Nelspruit Magistrate's Court has sentenced a convicted rhino poacher to 77 years in prison. Mandla Chauke was arrested in 2011 by rangers in the Kruger National Park.
Story first published: Thursday, July 24, 2014, 18:20 [IST]