ஆப்கன்: சாலையோர கண்ணிவெடியில் சிக்கி 9 குழந்தைகள் பலி: 3 பேர் படுகாயம்
காபூல்: தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 9 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 3 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
வரும் 2014ம் ஆண்டோடு நேட்டோ படைகள் ஆப்கனில் இருந்து வாபஸ் பெற உள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை கண்காணிக்கும் பணி காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போது தீவிரவாதிகளின் இலக்கு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது திரும்பியுள்ளது.
தொடர்ந்து, ராணுவம் மற்றும் காவல்துறையினரின் ரோந்து வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் சாலையோர கண்ணி வெடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுபோன்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி சுமார் 100 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிலர் தவறுதலாக சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளின் மீது காலை வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுகள் வெடிப்பில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், விபத்தில் சிக்கி மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேபோல் ஷபுல் மாகாணத்தின் தென்பகுதியான குவாலாட்டில் மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர், எதிர்பாராத விதமாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி விபத்தில் சிக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் பலியானார்கள்.
அடுத்தடுத்து நடந்த இந்த கண்ணி வெடி விபத்தில் சிக்கி குழந்தைகள் பலியானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications