ஆப்கன்: சாலையோர கண்ணிவெடியில் சிக்கி 9 குழந்தைகள் பலி: 3 பேர் படுகாயம்
காபூல்: தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 9 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 3 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
வரும் 2014ம் ஆண்டோடு நேட்டோ படைகள் ஆப்கனில் இருந்து வாபஸ் பெற உள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை கண்காணிக்கும் பணி காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போது தீவிரவாதிகளின் இலக்கு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது திரும்பியுள்ளது.
தொடர்ந்து, ராணுவம் மற்றும் காவல்துறையினரின் ரோந்து வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் சாலையோர கண்ணி வெடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுபோன்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி சுமார் 100 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிலர் தவறுதலாக சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளின் மீது காலை வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுகள் வெடிப்பில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், விபத்தில் சிக்கி மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேபோல் ஷபுல் மாகாணத்தின் தென்பகுதியான குவாலாட்டில் மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர், எதிர்பாராத விதமாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி விபத்தில் சிக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் பலியானார்கள்.
அடுத்தடுத்து நடந்த இந்த கண்ணி வெடி விபத்தில் சிக்கி குழந்தைகள் பலியானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications