தண்ணீர், மின்சார கட்டணம் செலுத்தக் கோரி போராடிய செளதி இளவரசர்கள் கைது
செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அரச அரண்மனையில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அரச குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற அரசின் முடிவால் இவர்கள் கோபமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
எண்ணெய் சார்ந்துள்ளது நிலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக செளதி அரசு தற்போது பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சில அரசாங்க மானியங்களை நீக்குவது உள்ளிட்ட, பொதுச் செலவுகளை செளதி அரசு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பெட்ரோல் விலையை செளதி அரேபியா இரட்டிப்பாக உயர்த்திருந்தது. அத்துடன் உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இளவரசர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தி செளதி வலைத்தளமான சாட்க்-கில் முதன்முதலாக வெளிவந்தது.
குறிப்பிடப்படாத குற்றத்திற்காக உறவினர் ஒருவருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் இளவரசர்கள் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது சாட்க்.
செளதியின் அரசு வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையை பார்வையிட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இளவரசர்கள் கைதை உறுதிப்படுத்தியுள்ளது.
பொது அமைதி மற்றும் ஒழுங்கிற்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் பெயரில், இளவரசர்கள் சிறையில் வைப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
செளதியில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில், டஜன் கணக்கான இளவரசர்களும், அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டனர்.
செளதி அரச குடும்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என கருதப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இடையே உள்ள செல்வமும், அந்தஸ்தும் பெருமளவில் வேறுபடுகின்றன
பிற செய்திகள்:
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- டிரம்பின் மனநலம் எப்படி இருக்கிறது? சர்ச்சை நூலால் பரபரப்பான விவாதம்
- ஓட்காவை காலி செய்து ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்
- கழிவறையை அசிங்கம் செய்த பயணியால் பாதியில் தரை இறங்கிய விமானம்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது














Click it and Unblock the Notifications