மும்பை தாக்குதலின் சூத்திரதாரி பயங்கரவாதி மசூத் அசார் எங்கே? பங்காளிகள் ஆப்கான்-பாக். இடையே மோதல்!
கராச்சி: ஐநாவால் தேடப்படும் பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான தீவிரவாதி மசூத் அசார் எங்கே என்பதில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதி வருகின்றன.
1990களில் பாகிஸ்தான் தூண்டுதலால் பல்வேறு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின. அதில் ஒன்றுதான் ஜெய்ஷ் இ முகமது. இதன் தலைவரான மசூத் அசார், 1994-ல் ஜம்மு காஷ்மீரில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் மசூத் அசார் உள்ளிட்ட சில பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் 1999-ல் பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இதனால் மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்திய சிறையில் இருந்து விடுதலையாகி பாகிஸ்தானுக்குள் பதுங்கிய மசூத் அசார்தான், இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக இருந்தார். 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதும் மசூத் அசார்தான். இதனால் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதையடுத்து பல்வேறு நெருக்கடிகளுக்குப் பின்னர் கண்துடைப்புக்காக மசூத் அசாரை கைது செய்த பாகிஸ்தான் பின்னர் விடுவித்தது.
அதேநேரத்தில் ஐநா சபையும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரையும் இணைத்தது. இருந்தபோதும் பாகிஸ்தானோ, தங்கள் நாட்டில் மசூத் அசார் இல்லை என்றே சாதித்து வருகிறது.
இந்த பின்னணியில் அண்மையில், ஆப்கானிஸ்தானில் மசூத் அசார் பதுங்கி உள்ளார்; அவரை கைது செய்து எங்களிடம் ஒப்படையுங்கள் என அந்நாட்டுக்கு பாகிஸ்தான் கடிதம் அனுப்பியது. இது ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களை கொந்தளிக்க வைத்தது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தலிபான்கள், மசூத் அசார் உங்கள் நாட்டில்தான் பதுங்கி உள்ளார்; எங்கள் நாட்டில் பதுங்கி இருப்பதாக பொய்யான தகவலை ஏன் பரப்ப வேண்டும் என கொந்தளித்துள்ளனர். மேலும் ஜெய்ஷ் இ முகமது என்கிற இயக்கம் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக் கூடியது. மசூத் அசார் எங்களிடம் இதுவரை அடைக்கலம் கேட்டது இல்லை. மசூத் அசார், ஆப்கானிஸ்தானில் பதுங்கி உள்ளதாக ஊடகங்கள்தான் சொல்கின்றன. அதிகாரப்பூர்வமாக ஆப்கான் அரசிடம் இதுவரை மசூத் அசார் அடைக்கலம் கேட்டதும் இல்லை; நாங்களும் அடைக்கலம் தந்ததும் இல்லை என கூறியுள்ளனர் தலிபான்கள். இதனால் இருநாடுகளிடையே உறவில் பதற்ற்மான நிலை உருவாகி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications