Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடீஸ்வரனாக்கிய "ஒர்க் பிரம் ஹோம்.." ஒரே நேரத்தில் 6 கம்பெனிகளில் வேலை பார்த்து சம்பாதித்த இளைஞர்

Subscribe to Oneindia Tamil

ரோம்: வீட்டிலிருந்தே வேலை என்ற நடைமுறையால் கோடீஸ்வரனாக மாற ஒரே சமயத்தில் 6 முழுநேர பணிகளை செய்வதாகவும், இந்த ஆண்டு ரூ.5 கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் ஐரோப்பா இளைஞர், 40 வயதில் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அனைவரின் பணிச்சூழலும் மாறியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டன. இது நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினரும், அலுவலகத்தில் பணி செய்வது போன்ற வசதி இல்லை என இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில நிறுவனங்களில் மட்டும் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணி செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில் தான் வீட்டில் இருந்து பணி செய்யும் நபர் ஒருவர் ஒரே சமயத்தில் 6 இடங்களில் வேலை செய்வது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

 ஒரே சமயத்தில் 6 முழுநேர பணி

ஒரே சமயத்தில் 6 முழுநேர பணி

‛ரெட்டிட்டர்' இணையதளத்தில் இளைஞர் ஒருவர் தனது பணி அனுபவம் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் ஐரோப்பாவை சேர்ந்தவன். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த காலக்கட்டம் என்னை 2வது தொழில் செய்யும்படி உந்தி தள்ளியது. முயற்சித்ததன் மூலம் நான் தற்போது 6 பணிகளை ஒரேநேரத்தில் செய்து வருகிறேன். இந்த பணிகள் அனைத்து முழுநேர பணிகளாகும். வீட்டில் இருந்து வேலை செய்வதாலே இது சாத்தியமானது.

ரூ.5.27 கோடி

ரூ.5.27 கோடி

இந்த ஆண்டு நான் 700 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.27 கோடி) சம்பாதித்து விடுவேன். 40 வயதிற்குள் கோடீஸ்வரனாக மாறி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். இந்த கனவை நினைவாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். என் நிறுவனத்தினர் என்னை ஒரு டெவலப்பர் என்ற அளவில் மட்டுமே வைத்துள்ளனர். இந்த பணியை திறமையாக செய்வேன். நான் மற்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுவது கிடையாது. இதனால் நிறுவனமும் என்னை கண்டுக்கொள்ளாது'' என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டும், விமர்சனமும்

பாராட்டும், விமர்சனமும்

இவரது இந்த பதிவை பலர் பாராட்டுகின்றனர். சிலர் விமர்சனம் செய்கின்றனர். அதாவது ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் திறனும், கடும் உழைப்பும் இருப்பதாக இருப்பத குறித்து பலர் பாராட்டினாலும், நேர்மை தவறுவதாக சிலர் விமர்சிக்கின்றனர்.

6 வேலையா...

6 வேலையா...

இதில் ஒருவர் ‛‛ஆறு வேலையா... அடடா.... இதுபற்றி எனக்கு சில டிப்ஸ் தரலாமா, ப்ளீஸ்? ஏனென்றால் நான் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன்" என கூறியுள்ளார். இன்னொரு நபரோ, "இவர் 6 வேலைகளை முழுநேரமாக செய்வார் என நினைக்கவில்லை. பார்ட் டைம் ஜாப் வேண்டுமானால் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் அவர் கூறிய ஊதிய சம்பாதிப்பும் மிகைப்படுத்தி கூறியதாக தெரிகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+