கோடீஸ்வரனாக்கிய "ஒர்க் பிரம் ஹோம்.." ஒரே நேரத்தில் 6 கம்பெனிகளில் வேலை பார்த்து சம்பாதித்த இளைஞர்
ரோம்: வீட்டிலிருந்தே வேலை என்ற நடைமுறையால் கோடீஸ்வரனாக மாற ஒரே சமயத்தில் 6 முழுநேர பணிகளை செய்வதாகவும், இந்த ஆண்டு ரூ.5 கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் ஐரோப்பா இளைஞர், 40 வயதில் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அனைவரின் பணிச்சூழலும் மாறியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டன. இது நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினரும், அலுவலகத்தில் பணி செய்வது போன்ற வசதி இல்லை என இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில நிறுவனங்களில் மட்டும் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணி செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில் தான் வீட்டில் இருந்து பணி செய்யும் நபர் ஒருவர் ஒரே சமயத்தில் 6 இடங்களில் வேலை செய்வது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ஒரே சமயத்தில் 6 முழுநேர பணி
‛ரெட்டிட்டர்' இணையதளத்தில் இளைஞர் ஒருவர் தனது பணி அனுபவம் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் ஐரோப்பாவை சேர்ந்தவன். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த காலக்கட்டம் என்னை 2வது தொழில் செய்யும்படி உந்தி தள்ளியது. முயற்சித்ததன் மூலம் நான் தற்போது 6 பணிகளை ஒரேநேரத்தில் செய்து வருகிறேன். இந்த பணிகள் அனைத்து முழுநேர பணிகளாகும். வீட்டில் இருந்து வேலை செய்வதாலே இது சாத்தியமானது.

ரூ.5.27 கோடி
இந்த ஆண்டு நான் 700 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.27 கோடி) சம்பாதித்து விடுவேன். 40 வயதிற்குள் கோடீஸ்வரனாக மாறி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். இந்த கனவை நினைவாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். என் நிறுவனத்தினர் என்னை ஒரு டெவலப்பர் என்ற அளவில் மட்டுமே வைத்துள்ளனர். இந்த பணியை திறமையாக செய்வேன். நான் மற்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுவது கிடையாது. இதனால் நிறுவனமும் என்னை கண்டுக்கொள்ளாது'' என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டும், விமர்சனமும்
இவரது இந்த பதிவை பலர் பாராட்டுகின்றனர். சிலர் விமர்சனம் செய்கின்றனர். அதாவது ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் திறனும், கடும் உழைப்பும் இருப்பதாக இருப்பத குறித்து பலர் பாராட்டினாலும், நேர்மை தவறுவதாக சிலர் விமர்சிக்கின்றனர்.

6 வேலையா...
இதில் ஒருவர் ‛‛ஆறு வேலையா... அடடா.... இதுபற்றி எனக்கு சில டிப்ஸ் தரலாமா, ப்ளீஸ்? ஏனென்றால் நான் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன்" என கூறியுள்ளார். இன்னொரு நபரோ, "இவர் 6 வேலைகளை முழுநேரமாக செய்வார் என நினைக்கவில்லை. பார்ட் டைம் ஜாப் வேண்டுமானால் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் அவர் கூறிய ஊதிய சம்பாதிப்பும் மிகைப்படுத்தி கூறியதாக தெரிகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications