For Daily Alerts
Just In
சீக்கியர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் மன்மோகன்சிங்குக்கு யு.எஸ். கோர்ட் சம்மன்!
ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில் 1990களில் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதிக்கான சீக்கியர் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் மன்மோகன்சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் அதிஉயர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இந்த சம்மன் கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த சிக்கலுக்கும் தீர்வு காண கோரி ஒரு மனு ஒன்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
English summary
As Prime Minister Manmohan Singh arrives here on a four-day visit, a Sikh rights group has secured summons against him from a US court in connection with the alleged human rights violations in the counter-insurgency operations in Punjab in the 1990s.
Story first published: Thursday, September 26, 2013, 11:30 [IST]