ஆப்கனைவிட்டு வெளியேறியது அமெரிக்கா: வெளியேறிய கடைசி வீரர் யார்? இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது ?
காபூல்: 20 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்கா ஆப்கனைவிட்டு வெளியேறி உள்ளது. அங்கு தங்கியிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவ வீரர் மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ இன்று அதிகாலை 12 மணிக்கு முன் வெளியேறினார். இதை தாலிபான்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போது தான் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
கடந்த அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விடிவதற்கு முன்பே தலிபான்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
காபூல் முழுவதும் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். தாலிபான்கள் 2001 ல் இருந்ததை விட வலுவாக மாறி. 20 வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

கடைசி வீரர்
தலிபான்களால் வெளியிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்கான அவசர மற்றும் அவமானகரமான வெளியேற்றத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், கடைசி அமெரிக்க துருப்புக்கள் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்திற்கு முன்பே புறப்படும் காட்சிகள் மற்றும் தாலிபன்கள் விமான நிலையத்திற்குள் நுழைவது போன்ற காட்சிகள் உள்ளன.

சுதந்திரம்
"கடைசி அமெரிக்க சிப்பாய் காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார், நம் நாடு முழு சுதந்திரம் பெற்றது" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுப் அல் ஜசீரா டிவியில் கூறினார், காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் உடன் வெளியேறும் விமானத்தின் காட்சிகளை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.

இறப்பு எவ்வளவு
அமெரிக்காவின் மிக நீண்ட யுத்தம் காரணமாக கிட்டத்தட்ட 2,500 அமெரிக்க துருப்புக்கள் மற்றும் 240,000 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் $ 2 டிரில்லியன் செலவாகி உள்ளது. 2001 ல் தலிபான்களை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதிலும், அல் கொய்தாவை விரட்டுவதிலும் ஆப்கானிஸ்தானில் போர் நடத்திய அமெரிக்கா, தற்போது அல்கொய்தா தீவிரவாதிகளை அழித்ததுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதி தாலிபன்களிடமே நாட்டை விட்டு விட்டு வெளியேறி உள்ளது.

கைவிட்டது
இதன் மூலம், 1996 முதல் 2001 வரை இருந்ததை விட இப்போது ஆப்கானிஸ்தானில் வலுவாக தாலிபன்கள் மாறி உள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அங்கு அமெரிக்கர்களுக்கு உதவியவர்களை, அம்போ என விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டது. அவர்கள் நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது. அவர்கள் தங்களுக்கு என்ன நடக்கும் என்ற அச்சதுடன் வாழ்கிறார்கள்.












Click it and Unblock the Notifications