4 ஆப்பிரிக்க போராளிகளைப் பிடிக்க உதவினால் ரூ 107 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்: தேடப்பட்டு வரும் நான்கு முக்கிய ஆப்பிரிக்க போராளிகளைப் பிடிக்க உதவுபவர்களுக்கு 18 மில்லியன் டாலர் சன்மானம் அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ 107 கோடியே 42 லட்சத்து நாற்பதாயிரம் ஆகும்.
வெளிநாட்டவர்களைக் கடத்துவது மற்றும் மேற்கத்திய இலக்குகளைத் தாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் நான்கு ஆப்பிரிக்க போராளிகளை அமெரிக்கா தீவிரமாகத் தேடி வருகிறது.
ஆனபோதும், அமெரிக்க அரசுக்கு போக்கு காட்டி அப்போராளிகள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, தலைமறைவாக உள்ள அந்த நான்கு போராளிகளைக் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. அதில், நைஜீரியா நாட்டில் செயல்பட்டுவரும் போகொஹாரம் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கண்டுபிடிக்க 5 மில்லியன் டாலர் பரிசு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் மகரெப் பகுதியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மேற்கு ஆப்பிரிக்காவின் ஜிஹாத் மற்றும் ஒற்றுமை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் இரண்டு பேர் பற்றித் துப்புத் தெரிவிப்போருக்கு தலா 5 மில்லியன் டாலர் வெகுமதி தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள மூன்று மில்லியன் அமெரிக்காவிற்கு எதிராகத் திட்டமிடும் எகிப்திய தீவிரவாதி ஒருவர் குறித்து தகவல் அளிப்போருக்கு வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications