கதறி ஓடும் கொரோனா.. தொற்று குறைந்து வருகிறதாம்.. உலக சுகாதார அமைப்பு புது தகவல்
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்
ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2 வருடமாக இந்த கொரோனா நம்மை உலுக்கி எடுத்து வருகிறது.. இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. என்ன மாதிரியான வைரஸ் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை..
நாளுக்கு நாள் வைரஸ் பல்வேறு ரூபங்களில் பரவ ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு நமக்கு தடுப்பூசி மட்டுமே ஆறுதலாக உள்ளது.

அமெரிக்கா
உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் தொற்று பாதிப்பில் உள்ளது.. இனி அடுத்தடுத்த வைரஸ் பரவல்கள் வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.. இந்த ஆண்டு தொடக்கத்தில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கியது... இந்தியாவையும் தாக்கியது.. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகியது.. மற்ற நாடுகளும் 2வது அலை பரவலை கண்டு நடுங்குகிறார்கள்..

டெல்டா
டெல்டா வகை கொரோனா காரணமாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாக காரணம் தெரிவிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியது என்றாலும் பாதிப்பு என்னவோ சில நாடுகளில் அதிகமாகவே இருந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் உலகளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. இது குறித்து அந்த அமைப்பு சொல்லி உள்ளதாவது:

தொற்று
"கடந்த வாரம் உலகளவில் 40 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்... கடந்த வாரம் 36 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.... இதனால் உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.2 மாதங்களுக்கு பிறகு மெல்ல குறைந்து வருகிறது... 2 பிராந்தியங்களில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கிறது.

குறைவு
மத்திய கிழக்கில் 22 சதவீதமும், தென்கிழக்கு ஆசியாவில் 16 சதவீதமும் குறைந்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா இறப்புகளில் 30 சதவீதம் குறைந்துள்ளது... அதேவேளையில் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் கடந்த வாரம் இறப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்துக்குள் வந்தது. முந்தைய வாரத்தில் ஒப்பிடும் போது 7 சதவீதம் குறைவு ஆகும்.

முக்கிய வைரஸ்
அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, துருக்கி, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தொற்று அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.. காரணம், வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு என்பதால், 185 நாடுகளில் இப்போதைக்கு வைரஸ் காணப்படுகிறது.. இப்படி உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படுகிறது.. டெல்டா மாறுபாடு உள்ள அனைத்து நாடுகளிலும் அது முக்கிய வைரசாக மாறிவிட்டது என்பதே உண்மை" என்று கூறப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications