எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்?
ரியோ: பிரேசிலில் டெலிகிராம் இணையவழி மெசேஜிங் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விலக்கிக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது.
வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக கொண்டு வரப்பட்ட டெலிகிராம் மெசஞ்சர் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்பை விட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள், சேனல், அதிக குழு உறுப்பினர்களை சேர்க்கும் வசதிகளை கொண்ட டெலிகிராமில் தனிநபர் விபரங்களை மறைத்தும் தகவல்களை பகிரலாம். இந்தியாவில் புதிதாக வெளியான திரைப்படங்களை டெலிகிராம் சேனல்கள் வாயிலாக பகிர்ந்து பலர் பார்த்து வருகின்றனர்.

பிரேசிலில் என்ன பிரச்சனை?
வரும் அக்டோபர் மாதம் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மறுதேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அந்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்களால் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிந்த அதிபர் ஜெயிர் பொல்சனாரோ டெலிகிராம் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்தார். அமேசான் காடுகளில் பரவிய காட்டுத்தீ, கொரோனா பரவல், தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாடுகளால் தனது செல்வாக்கு சரிந்திருப்பதை அறிந்த பொல்சனாரோ டெலிகிராமில் தவறான தகவல்களை பகிர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அரசியல் களமான டெலிகிராம்
இதன் மூலம் டெலிகிராம் செயலியில் 10 லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை பெற்றார் பொல்சனாரோ. அதேபோல் அவரது பெயரில் ஏராளமான குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக பகிரப்படும் தவறான தகவல்கள் குறித்து டெலிகிராம் நிறுவனத்திற்கு புகார்கள் குவிந்தன. இருப்பினும் டெலிகிராம் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிரேசில் நீதிபதி அறிவுறுத்தல்
இதுகுறித்து எழுந்த புகார்களை அடுத்து நாடு முழுவதும் தவறான தகவல்கள் பரவும் களமாக டெலிகிராம் செயலி இருப்பதாகவும், இதனை டெலிகிராம் நிறுவனம் உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி அலக்சாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார். இது குறித்து டெலிகிராம் செயலி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

டெலிகிராமுக்கு தடை விதித்த பிரேசில் உச்சநீதிமன்றம்
இதனால் டெலிகிராம் செயலி பிரேசிலின் சட்டத்தை அவமதித்துவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கவில்லை எனவும் கூறி தடை விதித்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம். இதுகுறித்து நீதிபதி அலக்சாண்ட்ரே டி மோரேஸ் தெரிவிக்கையில், "டெலிகிராம் செயலி சட்டத்தின் ஆட்சிக்கு பொருந்தாது என்றும், காவல்துறை, தேர்தல் தீர்ப்பாயங்களின் உத்தரவுகளையும் மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டியது.

பல்டி அடித்த பொல்சனாரோ
டெலிகிராம் செயலி மூலம் அரசியலுக்காக பொய் செய்திகள் பரப்புவதாக குற்றம்சாட்டப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ இந்த தடைக்கு வரவேற்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில், "உண்மையை பகிர்ந்துகொள்ளுங்கள், அதை நாங்கள் வரவேற்கிறோம்" எனக்குறிப்பிட்டு இருக்கிறார்.

2 நாட்களில் தடை வாபஸ்
பிரேசில் உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவு உண்மையா பொய்யா என்பது குறித்து ஆய்வு செய்வதற்குள் தடை விதிக்கப்பட்டு விட்டதாக டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து டெலிகிராம் மீதான தடையை திரும்பப்பெறுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications