உயிரை பணயம் வைத்து ஐஎஸ்ஐஎஸ் பிடியில் உள்ள நகரை வீடியோ எடுத்த 2 பெண்கள்: வீடியோ இதோ

Subscribe to Oneindia Tamil

ராக்கா: சிரியாவில் இரண்டு பெண்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் ராக்கா நகர் எப்படி உள்ளது என்பதை ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

சிரியாவில் உள்ள ராக்கா நகர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தலைமையகமாக உள்ளது. ஷரியா சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் ராக்கா நகரைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் பெண்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளின் பிடியில் ராக்கா நகர் எப்படி உள்ளது என்பதை ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ குறித்து தீவிரவாதிகளுக்கு தெரிய வந்தால் தங்களை கொலை செய்துவிடுவார்கள் என்பது தெரிந்தும் அவர்கள் துணிச்சலாக வீடியோ எடுத்துள்ளனர்.

அவ்வளவாக போக்குவரத்து இல்லாத தெருக்களில் சில ஆண்கள் ஆயுதங்களுடன் நடப்பதை அந்த பெண்கள் படம் பிடித்துள்ளனர். வான்வெளித் தாக்குதல்கள் நடப்பதால் பலர் நகரை விட்டு வெளியேறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த 2 பெண்களின் துணிச்சல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

தீர்மானம்

சிரியா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையின மதத்தவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இனப்படுகொலை செய்வதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+