மிஸ்ஸான ஸ்கெட்ச்.. போதையில் எதிரிக்கு பதில் நண்பனையே குத்திய ரவுடி! அடுத்து நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்
காஞ்சிபுரம்: ஓட்டலில் உணவு வர லேட்டானதால் ஆத்திரமடைந்த ரவுடி ஒருவர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ஓட்டல் உரிமையாளரை குத்துவதற்கு பதிலாக போதை மயக்கத்தில் அருகில் இருந்த தனது நண்பனையே குத்திய சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நண்பனையே கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய ரவுடியையையும், அவரது கூட்டாளியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ரவுடி சகவாசம்..
காஞ்சிபுரம் மாவட்டம் செட்டியார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (26). ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது பல அடிதடி வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. தற்போது கூட அடிதடி வழக்கு ஒன்றில் கைதாகி, கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெங்கடேசனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த காக்கா சுரேஷ் என்ற ரவுடியுடன் சகவாசம் இருந்தது. இதனால் அவருடன் சேர்ந்து அந்தப் பகுதியில் அடாவடித்தனத்தில் வெங்கடேசன் ஈடுபடுவது வழக்கம்.

ஜாமீனில் வெளிவந்ததால் 'ட்ரீட்'
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்ததால் நண்பர்களுக்கு ட்ரீட் வைப்பதாக வெங்கடேசன் கூறியுள்ளார். இதையடுத்து, ரவுடி காக்கா சுரேஷ், மற்றொரு ரவுடி சக்தி (எ) கலர் கோழிக்குஞ்சு ஆகியோருடன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாபி தாபா ஓட்டலுக்கு வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போது மூவரும் நன்றாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

சாப்பாடு வர லேட் - கலர் கோழி 'அப்செட்'
ஓட்டலுக்கு சென்ற அவர்கள் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் உணவு கொண்டு வருவதற்கு தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ரவுடி சக்தி என்ற கலர் கோழிக்குஞ்சு மிகவும் அப்செட் ஆகிவிட்டாராம். இதை பார்த்த வெங்கடேசனும், காக்கா சுரேஷும் நேராக ஓட்டல் உரிமையாளர் குட்டி என்பவரிடம் சென்று தகராறு செய்துள்ளனர்.

நெஞ்சில் பாய்ந்த கத்தி
அப்போது குட்டியை இருவரும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், குட்டியை வெங்கடேசன் பிடித்துக் கொள்ள, காக்கா சுரேஷ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து குட்டியை குத்த பாய்ந்துள்ளார். ஆனால், மதுபோதை தலைக்கேறிய நிலையில், யார் எங்கு இருக்கிறார்கள் என தெரியாமல் அருகில் இருந்த தனது நண்பன் வெங்கடேசனையே அவர் கத்தியால் குத்தினார். இதில் வெங்கடேசனின் நெஞ்சில் கத்தி பாய, அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதை பார்த்த காக்கா சுரேஷும், சக்தியும் அங்கிருந்து சிதறி ஓடினர். பின்னர் தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காக்கா சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications