'கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ பாஜகவின் பக்கா ப்ளான்! திராவிட கட்சிகளை காக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி
கன்னியாகுமரி : கழகங்கள் இல்லாத தமிழ்நாடு கவலைகள் இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தை பாரதிய ஜனதா கட்சி முன் வைத்துள்ளதால் தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் குமரிமாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு நடைபெற்றது,
இதனை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமும் அன்சாரி திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அக்னிபாத் திட்டம்
அப்போது பேசிய அவர்,"அக்னிபாத் திட்டம் என்பது நமது இந்திய ராணுவத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராணுவத்தில் ஆட்கள் தேர்வு செய்யும்போது அதில் 25% பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு உள்ளது 75% பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது.

கழகங்கள் இல்லாத தமிழ்நாடு
எனவே இதன்மூலம் ராணுவ பயிற்சி பெற்றவர்கள் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைக்கும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் கழகங்கள் இல்லாத தமிழ்நாடு கவலைகள் இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தை பாரதிய ஜனதா கட்சி முன் வைத்துள்ளதால் இது குறித்து யோசிக்க வேண்டி உள்ளது.

பாதுகாக்க வேண்டும்.
எனவே தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகள் செய்த சாதனைகளை மறைக்க முடியாது. எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசினாலும் மக்கள் ரசிப்பார்கள் ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.

நடவடிக்கை வேண்டும்
எனவே திராவிட கட்சிகளை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து, சாதாரண ஏழை மக்களும் கட்டுமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி பயனடைய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications