கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு நிறைவு.. பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!
கன்னியாகுமரி: இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கொரோனா அச்சுறுத்தல், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதேபோல் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

பொன். ராதாகிருஷ்ணன் போட்டி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 8-வது முறையாக களம் காண்கிறார். இவரை எதிர்த்து மறைந்த எச்.வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மக்கள் எழுச்சி
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ' தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு செய்ய மக்களிடம் பேரெழுச்சி காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 75% வாக்குகள் பதிவாகும் என்று அவர் தெரிவித்தார்.

விஜய்வசந்த் களமிறங்கினார்
இதேபோல் விஜய்வசந்தும் சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த நேரத்தில் தோராயமாக 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் இன்று இரவு 12 அல்லது 1 மணியளவில் தெரியவரும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications