"அலட்சியம் வேண்டாம்".. பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.. சிபிஎம் பாலபாரதி ஆவேசம்
கரூர்: "100 நாள் வேலைத் திட்டத்தில் முறையான பணி, ஊதியம் வழங்காவிட்டால் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக 100 நாள் வேலைத் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த திட்டத்தில் இணைந்து வேலை செய்வோருக்கு பல இடங்களில் குறைவான ஊதியம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கூட சில பகுதிகளில் இந்த 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமப்புற ஏழை, எளிய மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்றுகைப் போராட்டம்
அந்த வகையில், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முற்றுகை மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

"தொழிலாளர்களுக்கு பாதிப்பு"
இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலபாரதி தலைமை வகித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் 100 நாள் வேலை நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வருமானம் இன்றி நிர்கதியாக நிற்கின்றன.

"நிதி குறைக்கப்படுகிறது.."
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை முறையாக தராமல், மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாக, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வேலை ஒதுக்கவும், ஊதியம் அளிக்கவும் முடிவதில்லை. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.

"பாஜக அலுவலகங்கள் முற்றுகை"
100 நாள் வேலை திட்டத்தின் கீழே பணியாளர்களுக்கு முறையான வேலை, ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பாலபாரதி கூறினார். இதனிடையே, கரூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி உள்ளிட்டோர் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து பாலபாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆட்சியரிடம் பேசி முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக, போராட்டம் கைவிடப்ட்டது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications