ஒரே இடத்தில் 50,000 ஆடுகள்.. ரூ. 8 கோடிக்கு சேல்ஸ்.. அதிர வைத்த தீபாவளி சந்தை
Recommended Video

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையொட்டி ரூ 8 கோடிக்கு ஆடு விற்பனையானது. அதாவது ஒரே நாளில் 50 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆகி அசத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகபெரிய வாரச்சந்தையாக குந்தாரப்பள்ளி சந்தை திகழ்கிறது. இங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடு மாடுகள் கோழிகள் விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது.

விற்பனைக்கு வரும் ஆடுமாடுகளை வாங்க அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சேலம் ஈரோடு கோவை திருச்சி உட்பட பல மாவட்டத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து ஆடுமாடுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்றைய சந்தை தீபாவளி ஸ்பெஷல் சந்தையாக மாறியது. வழக்கத்திற்கு மாறாக தீபாவளி பண்டிகையொட்டி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைகாக வந்தது. ஆடுகளை வாங்க பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடைகொண்ட கிடா ஆடு ரூ 5 முதல் 6 ஆயிரம் வரையில் விற்பனை ஆகும். தற்போது தீபாவளி பண்டிகையொட்டி கூடுதலாக ரூ 7 முதல் 8 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் 3 ஆயிரம் முதல் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளை விற்க வாங்க அதிகளவில் விவசாயிகள் வியாபாரிகள் குவிந்ததால் குந்தாரப்பள்ளி பகுதியே மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. விடிக்காலை 4 மணிக்கு துவங்கிய சந்தையில் மதியம் 12 மணிக்குள் சுமார் ரூ 8 கோடி மேல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications