ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு.. மீட்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்றவரை அந்த பாம்பு இறுக்கியே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த விலங்காக இருந்தாலும் அதனிடத்தில் மனிதர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்க வேண்டும். மேலும் அதை கையாளும் போது இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் எந்த நேரத்தில் அது எப்படி நடந்து கொள்ளும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. சிறிது அலட்சியம் கூட பெரிய ஆபத்தில் கொண்டு சென்றுவிடும். இதனை மெய்ப்பிக்கும் விதமாக கிருஷ்ணகிரியில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள குல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயியான இவரது நிலத்தில் 50 அடிக்கும் ஆழமான கிணறு இருந்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் நீர் இரைப்பதற்காக விவசாயி சின்னசாமி சென்றுள்ளார். அப்போது கிணற்றுக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாம்பை மீட்க சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது கைக்கூடவில்லை.
இதனைத் தொடர்ந்து, கிணற்றில் இருந்து மலைப்பாம்பை வெளியே எடுப்பதற்காக கிராம மக்கள் உதவியை நாடியுள்ளார். அப்போது அவர்கள், பனகமுட்லு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, நடராஜ் வீட்டுக்கு சென்ற சின்னசாமி, அவரை அழைத்து வந்துள்ளார். கிணற்றுக்குள் மலைப்பாம்பு இருப்பதை பார்த்த அவர், கிணற்றுக்கு மேலே கயிறை கட்டி உள்ளே இறங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் மலைப்பாம்பை நெருங்கிய நடராஜ், அதனை லாவகமாக பிடித்துக் கொண்டு மேலே ஏறினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த மலைப்பாம்பு நடராஜின் கையை சுற்றி வளைத்தது. இதனால் அவரால் மேற்கொண்டு ஏற முடியவில்லை.
அதே சமயத்தில், மலைப்பாம்பும் அவரது உடலை இறுக்கத் தொடங்கியது. இதனால் நடராஜ் பிடி நழுவி மலைப்பாம்புடன் தண்ணீருக்குள் விழுந்தார். இதையடுத்து, மலைப்பாம்பு அவரை மெல்ல மெல்லமாக இறுக்கியது. இதில் உடல் எலும்புகள் உடைந்து மூச்சுத்திணறிய நடராஜ் அபயக்குரல் எழுப்பினார். ஆனால் மேலே உள்ள கிராம மக்களால் அவரை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு, நடராஜை மீட்டனர். ஆனால் நடராஜ் உயிரிழந்து கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து, கிணற்றுக்குள் இருக்கும் மலைப்பாம்பை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications